"நெற்றியில் அறிவை தேக்கி, நெஞ்சத்தில் வீரம் தேக்கி, வற்றாத நாவில் நாளும் வளமுறும் கருத்தை தேக்கி, சுற்றாமல் சுற்றும் கண்ணில் துடிப்பினைத் தேக்கி, மண்ணில் கற்றவர் திகைக்கும் வண்ணம் காண்பவர் ஒருவர் அண்ணா 'என்று கவிஞர் வேழவேந்தன் வாழ்த்துவதற்கு அமைய, நெற்றியில் அறிவைத் தேக்கி, நெஞ்சத்தில் வீரத்தைத் தேக்கி, வற்றாத நாவில் நாளும் வளமுறும் கருத்தைத் தேக்கி வைத்துக்கொண்டு மழைபோல், சொற்பொழிவுகளை பொழிந்தவர் அண்ணா. சுற்றாமல் சுற்றாமல் சுற்றும் தன் கண்ணில் துடிப்பினைத் தேக்கி வைத்த அண்ணா தூங்கிக் கிடந்த தமிழ் இனத்தை துடித்தெழச் செய்தார்.
"கற்றாரை கற்றாரே காமுறுவர்" என்பது முதுமொழி. ஆனால், அண்ணாவின் சிந்தனையும் பேச்சும் எழுத்தும் தமிழகத்தின் கற்றாரை மட்டுமல்ல, இந்தியத் துணைக் கண்டத்தின் கற்றாரையே திகைப்படையச் செய்தது. எனவே, தான் அண்ணாவின் கன்னிப் பேச்சினை செவிமடுத்த நேரு "இவர் தம் வருகை வரவில் வைக்கப்பட வேண்டியதாகும்' என்று கூறிச் சென்றார்.
காஞ்சி நடராசனுக்கும் பங்காரு அம்மையாருக்கும் 15.09.1909 அன்று தோன்றிய அறிஞர் அண்ணா, 03.02.1969 இல் தனது அறுபதாவது அகவையை எட்டும் போது நம்மை விட்டுப் பிரிந்தார். இந்தியெனும் புற்றுநோய் தமிழினத்தை தாக்குவதை எதிர்த்து போரிட்டு பெரு வெற்றி கண்ட அறிஞர் அண்ணா தன்னை தாக்கிய புற்றுநோயிடம் தோல்வி கண்டார். தமிழக மக்கள் அவர் மீது எவ்வளவு அன்பை வைத்திருந்தனர் என்பதை அவர் மறைந்தபோது அவர்கள் துடிதுடித்து ஐயோ! என்று அலறிய காட்சி சான்று கூறும். அறிஞர் மறைந்ததையடுத்து 04.02.1969 இல் வெளிவந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் பின்வரும் தலைப்புச் செய்தியை வெளியிட்டது.'If tears could bring back a man to life Mr.Annadurai would be living again' (மக்களின் அழுகை ஒரு மனிதனின் உயிரை மீட்க முடியுமென்றால் திரு. அண்ணாதுரை மீண்டும் எம்மிடையே வாழ்ந்திருப்பார்) என்பதேயாகும்.
அண்ணா ஏறக்குறைய 40 ஆண்டுகள் தமிழக அரசியலில், சமுதாயத்தில் புரட்சிகரமான மாறுதலை உருவாக்கியவர். அவர் முதலமைச்சராக 23 மாதங்கள் தான் இருக்க முடிந்தது. புற்றுநோய் அவரை முற்றுகையிட, அவரது வாழ்வு முடிவுற்றது. எனினும், அவர் பதவி வகித்த 23 மாதங்களில் எம் வழித்தோன்றல்கள் அவரை என்றும் நினைத்துப் பார்க்கின்ற முறையில் வரலாறு வாழ்த்துகின்ற வகையில் தமிழனின் தன்மானம் காக்கவும் அவனின் தனித்துவத்தை நிலைநாட்டவும், தன்மானத் திருமண முறையை (சுயமரியாதை திருமணத்தை) சட்டமாக நிறைவேற்றினார்.
இந்தியை உள்ளடக்கிய மும்மொழித் திட்டத்தை முறியடித்து இருமொழித் திட்டத்தைக் கொண்டு வந்து தமிழ் ஆட்சி மொழியாக ஆக்கவும் பக்கத் துணையாக ஆங்கிலம் அமையவும் வழி வகுத்தார்.
சென்னை மாகாணத்திற்கு ""தமிழ் நாடு' என்று பெயர் சூட்டி தமிழனுக்கு ஒரு நாடு உண்டு, அங்கு பேசப்படும் மொழி தமிழ், அங்கு வாழ்பவர்கள் தமிழர்கள் , அங்கு ஆளும் மொழி தமிழ் என்பதை உலகுக்கு பறைசாற்றினார்.
ஆட்சி மொழி தமிழாக இருக்க வேண்டுமென்பதை வற்புறுத்திய அண்ணா, பயிற்சி மொழி தமிழாக இருந்தால்தான் ஆட்சி மொழி தமிழாக மலர முடியும் என்பதை உணர்ந்து தமிழைப் பயிற்சி மொழியாக்கப்பாடுபட்டார். அவரின் தமிழ் உள்ளத்தை பின்வரும் கூற்று எடுத்துக்காட்டுகிறது.
""தமிழில் பாட மொழி இருக்க வேண்டும் என்று சொல்வது இந்த நாட்டில் தான் தேவைப்படுகிறது. ஆங்கில நாட்டில் ஆங்கிலம் தான் பாட மொழி என்று சொல்ல வேண்டிய தேவை ஏற்படவில்லை. எந்த இல்லாத விந்தை இங்கேதான் இருக்கின்றது. "தமிழில் கற்பிக்கலாமா? என்னும் கேள்வியும் முடியுமா? என்னும் எதிர்ப்பும் பார்க்கலாம் என்னும் சந்தேகமும் தமிழ் மொழிப் பயிற்சி பெறுபவர்கள் என்ன ஆவார்கள்? இதுவரை பெற்றவர்கள் என்ன ஆனார்கள்? என்று இந்த நாட்டிலேதான் பேசப்படுகிறது' என்று அவர் கூறிய கூற்று ஏற்ற முறையில் தமிழைப் பயிற்சி மொழியாக ஆக்க முடியவில்லையே என்று அவருக்கிருந்த ஆழ்ந்த கவலையை எடுத்துக் காட்டுகிறது.
ஈழத்தமிழர்க்காக அன்றே குரல் எழுப்பியவர்
தமிழகத்தின் தலைவர்களில் ஈழத்தமிழர்கள் எதிர்நோக்கும் சிக்கலையொட்டி இன்று நேற்றல்ல; அன்றே பிரச்சினையை ஆழமாக அறிந்த நிலையில், அறிவு நிலையிலும் உணர்வு நிலையிலும் ஈழத்தமிழருக்காக குரல் எழுப்பியவர் நம் அண்ணா.
இலங்கையில் வாழ்ந்த இந்திய வம்சாவளித் தமிழர்களின் குடியுரிமை, வாக்குரிமை பறிக்கப்பட்டு அரசியல் அநாதைகளாக்கப்பட்டபோது சிங்கள அரசின் இனவெறிப் போக்கினை அண்ணா கடுமையாகச் சாடினார். சிறிமாவோசாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் ஐந்தரை இலட்சத்திற்கு மேற்பட்ட இந்திய வம்சாவளி மக்களை இந்தியாவிற்கு அனுப்ப அன்று ஆட்சியிலிருந்த சிறிமாவோ அரசு முயன்றபோது அக்கொடிய செயலைக் கண்டித்தவர் நம் அண்ணா.
""சாத்துக்குடி பழத்தின் சாற்றினைப் பிழிந்த பின்பு தூக்கி எறியும் நிகழ்ச்சியே இம்மக்களை வெளியேற்றும் நிகழ்ச்சி' என்று தன் மனிதாபிமான உணர்வினையும் தன் தமிழின உரிமை வேட்கையையும் உணர்த்தியவர் நம் அண்ணா.
ஈழத்தமிழர் மீது 1956 இல் சிங்களம் மட்டும் சட்டம் திணிக்கப்பட்டபோது அதை எதிர்த்து ஈழத்தமிழர்கள் தொடர்ச்சியாகப் போரிட்டபோது வெறிகொண்ட சிங்களக் காடையர்கள் தமிழ் மக்களைத் தாக்கி இனப் படுகொலை செய்ய முயன்றபோது ஓங்கிக் குரலெழுப்பியவர் அண்ணா. தமிழக சட்டமன்றத்திலும் டில்லி மாநில அவையிலும் அவர் ஆணித்தரமாக கூறிய கருத்துகளை சட்டமன்றப் பதிவேடுகளிலும் மாநில அவைப் பதிவேடுகளிலும் காணலாம்.
அவர் தனது "திராவிட நாடு' இதழிலும்,"ஹோம் ?ல்'" ஹோம் லாண்ட்'இதழிலும் தன் தம்பிக்கு எழுதிய கடிதங்களிலும் தலைப்புச் செய்திகளிலும் ஆசிரியர் தலையங்களிலும் தன் ஆழ்ந்த அரசியல் அறிவினைக் காட்டும் முறையிலும் சிங்களத் தலைவர்களுக்கு இடித்துரைக்கும் முறையிலும் கூறிய சொற்களை இன்றும் படிக்கின்றபோதும் எம்மை மீறிக் கண்கள் கலங்கும்.
ஈழத்தமிழர் சார்பில் உலக அரங்கமாகிய ஐ. நா. மன்றத்திலும் ஈழத்தமிழர்களுக்காக அறிக்கைகளை அனுப்பி ஈழத் தமிழர் பிரச்சினையை அனைத்துலகப் பிரச்சினையாக்கியவர் நமது அண்ணா.
ஈழத்தமிழர் சார்பில் அண்ணா குரலெழுப்பியபோது, அப்போது பாதுகாப்பு அமைச்சராக விளங்கிய வி. கே. கிருஷ்ணமேனன் இலங்கையின் உள்நாட்டு அரசியலில் தலையிடுவது முறையல்ல என்று கூறியபோது, அறிஞர் அண்ணா தனக்கே உரிய தனி நடையில் பொடி போடும் முறையில் "கிருஷ்ணமேனன் பெரிய அரசியல் அறிஞர் என்பதை நான் ஏற்கின்றேன்' என்று கூறிய அவர் "என் வீட்டின் அயலவன் தன் மனைவியை இறுக அணைத்து முத்தம் சொரிகின்ற போது நான் பார்க்கமாட்டேன், மாறாக, வெட்கித் தலைகுனிந்து வேறு இடம் சென்று விடுவேன். ஆனால்,அதே அயலவன் தான் கணவன் என்ற உரிமையில் தன் மனைவியின் கழுத்தில் கத்தி வைக்கின்ற போது, அவள் ஐயோ என்று அலறுகின்ற போது, நான் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அது போன்று தான் என் தமிழன் இலங்கையில் கொலைக்கு ஆளாகின்ற போது நான் பார்த்துக் கொண்டிருக்க முடியாது' என்று அண்ணா கூறிய போது அதற்கு கிருஷ்ணமேனன் பதில் கூறியதாக நாடாளுமன்றப் பதிவேட்டில் எந்தக் குறிப்பும் இல்லை.
அந்தளவிற்கு தூய்மையோடு, தெளிவோடு, துணிவோடு, ஈழத்தமிழர் அழிவைத் தடுக்க முனைந்தவர் நம் அண்ணா என்பதை நாம் மறக்க முடியாது. அரசியலில் வசதிக்காக ஈழத்தமிழன் அழிவைப் பற்றி அக்கறை கொள்ளாது அமைதி மேற்கொண்டுள்ள அண்ணாவின் தம்பிமார்கள் அண்ணா அன்று பேசிய பேச்சுகளை, ஏற்றமிக்க கட்டுரைகளை, அறிக்கைகளைப் படித்து தம் மறதியைப் பற்றி போக்கிக் கொள்வது வரலாறு. அவர்கள் மீது வசைபாடாதிருக்கத் துணை நிற்கும். அண்ணாவின் உணர்வில் ஊறிய நம் கவிஞர் வேழவேந்தன் ஈழத்தமிழர் நிலையைப் பற்றி எம்மை அப்படியே ஆட்கொள்ளுகின்ற முறையில் பின்வருமாறு பாடிச் சென்றுள்ளார்.
"தாய்நாட்டு தமிழனுக்கோ இந்தித் தொல்லை: தணல் போன்று சிங்களமோ உனக்குத் தொல்லை! நாய்வாழ்வு வாழுதடா தமிழ்ச்சாதி நாகரிக முதல் மனிதன் நீயா? வெட்கம்! ஓய் தமிழா! உலகத்து ஐ.நா. மன்றில் உனக்காக வாதாட ஒருவர் தேவை! பாய்போட்டே உறங்கியது போதும்: இன்றே பாழ்விழியைத் திறந்து விட்டுக் கழுவாய் தேடு.
ஆம், நம் கவிஞர் வேழவேந்தன் கூறுவதற்கமைய, உலகத்து ஐ. நா. மன்றத்தில், தமிழன் அழிவைத் தடுக்கின்ற குரல் ஓங்கி ஒலிக்கச் செய்ய வேண்டியது தமிழகத்தின் தலையாய கடமை. "பாய்போட்டே உறங்கியது போதும் இன்றே பாழ்விழியைத் திறந்து விட்டுக் கழுவாய் தேடு' என்ற வேழவேந்தன் கூற்றுக்கு ஈழவேந்தனாகிய நாமும் வழிமொழி கூற விரும்புகின்றோம். அண்ணா மனம் திறந்து வாழ்த்திய கவிஞன் வேழவேந்தன் என்பதற்கு அண்ணா வேழவேந்தன் நூலுக்கு அளித்துள்ள அணிந்துரை சான்று கூறும்.
அறிஞர் அண்ணா இன்று உயிருடன் இருந்து தன் தலையை அசைத்தால் ஆயிரம் படைகள் கூடுவது உறுதி. அண்ணா நா அசைத்தால் அணுவெல்லாம் வீரம் பாடும். அண்ணா கண் அசைத்தால் ஆதிக்கம் அசைந்தே ஆடும். அன்னவர் விரல் அசைத்தால் அடுபகை நடுங்கி ஓடும். அத்தகைய அண்ணா எம்மிடம் இன்று இல்லை. எனினும், அண்ணாவின் அருமைத் தம்பிமார்கள் என்று உரிமை கொண்டாடுகின்ற தம்பிமார்கள் அண்ணாவின் சிந்தனை வழி செயற்பட வேண்டுமென்பது எமது விடுதல் அறியா விருப்பம்.
பல்துறை அறிஞன்
அண்ணா எண்ணாத துறையே இல்லை. கதைகளால், நாடகத்தால், கட்டுரைத் திறத்தால், பேச்சால் சிதைவிலாக் கருத்தை ஆக்கி சிந்தனை விருந்து வைக்கும் புதையலாய் விளங்கினார் அண்ணா. அவர் உண்மையில் இந்நாட்டின் புதிய சமையற்காரர் என்று கூறுவது முற்றும் பொருந்தும்.இவற்றையெல்லாம் நினைவு கொண்டுதான் நம் தமிழ்த் தென்றல் திரு. வி. க.; அண்ணாவைப் பற்றி அன்றே போற்றிப் பாடிய பாடலில்;
"அண்ணா துரையென்னும் அண்ணல் தமிழ்நாட்டு வண்ணான் அழுக்கெடுப்பில் வாய் மொழியில் பண்ணாவான் சிற்பனெழுத் தோவியத்தில் செவ்வரசு நாவாயின் அற்புதஞ்சூழ் மாலுமியென்றாடு' என்று போற்றிய உரை வெறும் புகழுரை அல்ல. மாறாக பொருள் பொதிந்த பொன்னுரை என்பதனை அண்ணாவின் வாழ்வு எமக்கு உணர்த்தியுள்ளது.வரலாறு தருகின்ற தீர்ப்பும் அதுவேயாகும் [நன்றி: தினக்குரல்]
"கற்றாரை கற்றாரே காமுறுவர்" என்பது முதுமொழி. ஆனால், அண்ணாவின் சிந்தனையும் பேச்சும் எழுத்தும் தமிழகத்தின் கற்றாரை மட்டுமல்ல, இந்தியத் துணைக் கண்டத்தின் கற்றாரையே திகைப்படையச் செய்தது. எனவே, தான் அண்ணாவின் கன்னிப் பேச்சினை செவிமடுத்த நேரு "இவர் தம் வருகை வரவில் வைக்கப்பட வேண்டியதாகும்' என்று கூறிச் சென்றார்.
காஞ்சி நடராசனுக்கும் பங்காரு அம்மையாருக்கும் 15.09.1909 அன்று தோன்றிய அறிஞர் அண்ணா, 03.02.1969 இல் தனது அறுபதாவது அகவையை எட்டும் போது நம்மை விட்டுப் பிரிந்தார். இந்தியெனும் புற்றுநோய் தமிழினத்தை தாக்குவதை எதிர்த்து போரிட்டு பெரு வெற்றி கண்ட அறிஞர் அண்ணா தன்னை தாக்கிய புற்றுநோயிடம் தோல்வி கண்டார். தமிழக மக்கள் அவர் மீது எவ்வளவு அன்பை வைத்திருந்தனர் என்பதை அவர் மறைந்தபோது அவர்கள் துடிதுடித்து ஐயோ! என்று அலறிய காட்சி சான்று கூறும். அறிஞர் மறைந்ததையடுத்து 04.02.1969 இல் வெளிவந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் பின்வரும் தலைப்புச் செய்தியை வெளியிட்டது.'If tears could bring back a man to life Mr.Annadurai would be living again' (மக்களின் அழுகை ஒரு மனிதனின் உயிரை மீட்க முடியுமென்றால் திரு. அண்ணாதுரை மீண்டும் எம்மிடையே வாழ்ந்திருப்பார்) என்பதேயாகும்.
அண்ணா ஏறக்குறைய 40 ஆண்டுகள் தமிழக அரசியலில், சமுதாயத்தில் புரட்சிகரமான மாறுதலை உருவாக்கியவர். அவர் முதலமைச்சராக 23 மாதங்கள் தான் இருக்க முடிந்தது. புற்றுநோய் அவரை முற்றுகையிட, அவரது வாழ்வு முடிவுற்றது. எனினும், அவர் பதவி வகித்த 23 மாதங்களில் எம் வழித்தோன்றல்கள் அவரை என்றும் நினைத்துப் பார்க்கின்ற முறையில் வரலாறு வாழ்த்துகின்ற வகையில் தமிழனின் தன்மானம் காக்கவும் அவனின் தனித்துவத்தை நிலைநாட்டவும், தன்மானத் திருமண முறையை (சுயமரியாதை திருமணத்தை) சட்டமாக நிறைவேற்றினார்.
இந்தியை உள்ளடக்கிய மும்மொழித் திட்டத்தை முறியடித்து இருமொழித் திட்டத்தைக் கொண்டு வந்து தமிழ் ஆட்சி மொழியாக ஆக்கவும் பக்கத் துணையாக ஆங்கிலம் அமையவும் வழி வகுத்தார்.
சென்னை மாகாணத்திற்கு ""தமிழ் நாடு' என்று பெயர் சூட்டி தமிழனுக்கு ஒரு நாடு உண்டு, அங்கு பேசப்படும் மொழி தமிழ், அங்கு வாழ்பவர்கள் தமிழர்கள் , அங்கு ஆளும் மொழி தமிழ் என்பதை உலகுக்கு பறைசாற்றினார்.
ஆட்சி மொழி தமிழாக இருக்க வேண்டுமென்பதை வற்புறுத்திய அண்ணா, பயிற்சி மொழி தமிழாக இருந்தால்தான் ஆட்சி மொழி தமிழாக மலர முடியும் என்பதை உணர்ந்து தமிழைப் பயிற்சி மொழியாக்கப்பாடுபட்டார். அவரின் தமிழ் உள்ளத்தை பின்வரும் கூற்று எடுத்துக்காட்டுகிறது.
""தமிழில் பாட மொழி இருக்க வேண்டும் என்று சொல்வது இந்த நாட்டில் தான் தேவைப்படுகிறது. ஆங்கில நாட்டில் ஆங்கிலம் தான் பாட மொழி என்று சொல்ல வேண்டிய தேவை ஏற்படவில்லை. எந்த இல்லாத விந்தை இங்கேதான் இருக்கின்றது. "தமிழில் கற்பிக்கலாமா? என்னும் கேள்வியும் முடியுமா? என்னும் எதிர்ப்பும் பார்க்கலாம் என்னும் சந்தேகமும் தமிழ் மொழிப் பயிற்சி பெறுபவர்கள் என்ன ஆவார்கள்? இதுவரை பெற்றவர்கள் என்ன ஆனார்கள்? என்று இந்த நாட்டிலேதான் பேசப்படுகிறது' என்று அவர் கூறிய கூற்று ஏற்ற முறையில் தமிழைப் பயிற்சி மொழியாக ஆக்க முடியவில்லையே என்று அவருக்கிருந்த ஆழ்ந்த கவலையை எடுத்துக் காட்டுகிறது.

ஈழத்தமிழர்க்காக அன்றே குரல் எழுப்பியவர்
தமிழகத்தின் தலைவர்களில் ஈழத்தமிழர்கள் எதிர்நோக்கும் சிக்கலையொட்டி இன்று நேற்றல்ல; அன்றே பிரச்சினையை ஆழமாக அறிந்த நிலையில், அறிவு நிலையிலும் உணர்வு நிலையிலும் ஈழத்தமிழருக்காக குரல் எழுப்பியவர் நம் அண்ணா.
இலங்கையில் வாழ்ந்த இந்திய வம்சாவளித் தமிழர்களின் குடியுரிமை, வாக்குரிமை பறிக்கப்பட்டு அரசியல் அநாதைகளாக்கப்பட்டபோது சிங்கள அரசின் இனவெறிப் போக்கினை அண்ணா கடுமையாகச் சாடினார். சிறிமாவோசாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் ஐந்தரை இலட்சத்திற்கு மேற்பட்ட இந்திய வம்சாவளி மக்களை இந்தியாவிற்கு அனுப்ப அன்று ஆட்சியிலிருந்த சிறிமாவோ அரசு முயன்றபோது அக்கொடிய செயலைக் கண்டித்தவர் நம் அண்ணா.
""சாத்துக்குடி பழத்தின் சாற்றினைப் பிழிந்த பின்பு தூக்கி எறியும் நிகழ்ச்சியே இம்மக்களை வெளியேற்றும் நிகழ்ச்சி' என்று தன் மனிதாபிமான உணர்வினையும் தன் தமிழின உரிமை வேட்கையையும் உணர்த்தியவர் நம் அண்ணா.
ஈழத்தமிழர் மீது 1956 இல் சிங்களம் மட்டும் சட்டம் திணிக்கப்பட்டபோது அதை எதிர்த்து ஈழத்தமிழர்கள் தொடர்ச்சியாகப் போரிட்டபோது வெறிகொண்ட சிங்களக் காடையர்கள் தமிழ் மக்களைத் தாக்கி இனப் படுகொலை செய்ய முயன்றபோது ஓங்கிக் குரலெழுப்பியவர் அண்ணா. தமிழக சட்டமன்றத்திலும் டில்லி மாநில அவையிலும் அவர் ஆணித்தரமாக கூறிய கருத்துகளை சட்டமன்றப் பதிவேடுகளிலும் மாநில அவைப் பதிவேடுகளிலும் காணலாம்.
அவர் தனது "திராவிட நாடு' இதழிலும்,"ஹோம் ?ல்'" ஹோம் லாண்ட்'இதழிலும் தன் தம்பிக்கு எழுதிய கடிதங்களிலும் தலைப்புச் செய்திகளிலும் ஆசிரியர் தலையங்களிலும் தன் ஆழ்ந்த அரசியல் அறிவினைக் காட்டும் முறையிலும் சிங்களத் தலைவர்களுக்கு இடித்துரைக்கும் முறையிலும் கூறிய சொற்களை இன்றும் படிக்கின்றபோதும் எம்மை மீறிக் கண்கள் கலங்கும்.
ஈழத்தமிழர் சார்பில் உலக அரங்கமாகிய ஐ. நா. மன்றத்திலும் ஈழத்தமிழர்களுக்காக அறிக்கைகளை அனுப்பி ஈழத் தமிழர் பிரச்சினையை அனைத்துலகப் பிரச்சினையாக்கியவர் நமது அண்ணா.
ஈழத்தமிழர் சார்பில் அண்ணா குரலெழுப்பியபோது, அப்போது பாதுகாப்பு அமைச்சராக விளங்கிய வி. கே. கிருஷ்ணமேனன் இலங்கையின் உள்நாட்டு அரசியலில் தலையிடுவது முறையல்ல என்று கூறியபோது, அறிஞர் அண்ணா தனக்கே உரிய தனி நடையில் பொடி போடும் முறையில் "கிருஷ்ணமேனன் பெரிய அரசியல் அறிஞர் என்பதை நான் ஏற்கின்றேன்' என்று கூறிய அவர் "என் வீட்டின் அயலவன் தன் மனைவியை இறுக அணைத்து முத்தம் சொரிகின்ற போது நான் பார்க்கமாட்டேன், மாறாக, வெட்கித் தலைகுனிந்து வேறு இடம் சென்று விடுவேன். ஆனால்,அதே அயலவன் தான் கணவன் என்ற உரிமையில் தன் மனைவியின் கழுத்தில் கத்தி வைக்கின்ற போது, அவள் ஐயோ என்று அலறுகின்ற போது, நான் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அது போன்று தான் என் தமிழன் இலங்கையில் கொலைக்கு ஆளாகின்ற போது நான் பார்த்துக் கொண்டிருக்க முடியாது' என்று அண்ணா கூறிய போது அதற்கு கிருஷ்ணமேனன் பதில் கூறியதாக நாடாளுமன்றப் பதிவேட்டில் எந்தக் குறிப்பும் இல்லை.
அந்தளவிற்கு தூய்மையோடு, தெளிவோடு, துணிவோடு, ஈழத்தமிழர் அழிவைத் தடுக்க முனைந்தவர் நம் அண்ணா என்பதை நாம் மறக்க முடியாது. அரசியலில் வசதிக்காக ஈழத்தமிழன் அழிவைப் பற்றி அக்கறை கொள்ளாது அமைதி மேற்கொண்டுள்ள அண்ணாவின் தம்பிமார்கள் அண்ணா அன்று பேசிய பேச்சுகளை, ஏற்றமிக்க கட்டுரைகளை, அறிக்கைகளைப் படித்து தம் மறதியைப் பற்றி போக்கிக் கொள்வது வரலாறு. அவர்கள் மீது வசைபாடாதிருக்கத் துணை நிற்கும். அண்ணாவின் உணர்வில் ஊறிய நம் கவிஞர் வேழவேந்தன் ஈழத்தமிழர் நிலையைப் பற்றி எம்மை அப்படியே ஆட்கொள்ளுகின்ற முறையில் பின்வருமாறு பாடிச் சென்றுள்ளார்.
"தாய்நாட்டு தமிழனுக்கோ இந்தித் தொல்லை: தணல் போன்று சிங்களமோ உனக்குத் தொல்லை! நாய்வாழ்வு வாழுதடா தமிழ்ச்சாதி நாகரிக முதல் மனிதன் நீயா? வெட்கம்! ஓய் தமிழா! உலகத்து ஐ.நா. மன்றில் உனக்காக வாதாட ஒருவர் தேவை! பாய்போட்டே உறங்கியது போதும்: இன்றே பாழ்விழியைத் திறந்து விட்டுக் கழுவாய் தேடு.
ஆம், நம் கவிஞர் வேழவேந்தன் கூறுவதற்கமைய, உலகத்து ஐ. நா. மன்றத்தில், தமிழன் அழிவைத் தடுக்கின்ற குரல் ஓங்கி ஒலிக்கச் செய்ய வேண்டியது தமிழகத்தின் தலையாய கடமை. "பாய்போட்டே உறங்கியது போதும் இன்றே பாழ்விழியைத் திறந்து விட்டுக் கழுவாய் தேடு' என்ற வேழவேந்தன் கூற்றுக்கு ஈழவேந்தனாகிய நாமும் வழிமொழி கூற விரும்புகின்றோம். அண்ணா மனம் திறந்து வாழ்த்திய கவிஞன் வேழவேந்தன் என்பதற்கு அண்ணா வேழவேந்தன் நூலுக்கு அளித்துள்ள அணிந்துரை சான்று கூறும்.
அறிஞர் அண்ணா இன்று உயிருடன் இருந்து தன் தலையை அசைத்தால் ஆயிரம் படைகள் கூடுவது உறுதி. அண்ணா நா அசைத்தால் அணுவெல்லாம் வீரம் பாடும். அண்ணா கண் அசைத்தால் ஆதிக்கம் அசைந்தே ஆடும். அன்னவர் விரல் அசைத்தால் அடுபகை நடுங்கி ஓடும். அத்தகைய அண்ணா எம்மிடம் இன்று இல்லை. எனினும், அண்ணாவின் அருமைத் தம்பிமார்கள் என்று உரிமை கொண்டாடுகின்ற தம்பிமார்கள் அண்ணாவின் சிந்தனை வழி செயற்பட வேண்டுமென்பது எமது விடுதல் அறியா விருப்பம்.
பல்துறை அறிஞன்
அண்ணா எண்ணாத துறையே இல்லை. கதைகளால், நாடகத்தால், கட்டுரைத் திறத்தால், பேச்சால் சிதைவிலாக் கருத்தை ஆக்கி சிந்தனை விருந்து வைக்கும் புதையலாய் விளங்கினார் அண்ணா. அவர் உண்மையில் இந்நாட்டின் புதிய சமையற்காரர் என்று கூறுவது முற்றும் பொருந்தும்.இவற்றையெல்லாம் நினைவு கொண்டுதான் நம் தமிழ்த் தென்றல் திரு. வி. க.; அண்ணாவைப் பற்றி அன்றே போற்றிப் பாடிய பாடலில்;
"அண்ணா துரையென்னும் அண்ணல் தமிழ்நாட்டு வண்ணான் அழுக்கெடுப்பில் வாய் மொழியில் பண்ணாவான் சிற்பனெழுத் தோவியத்தில் செவ்வரசு நாவாயின் அற்புதஞ்சூழ் மாலுமியென்றாடு' என்று போற்றிய உரை வெறும் புகழுரை அல்ல. மாறாக பொருள் பொதிந்த பொன்னுரை என்பதனை அண்ணாவின் வாழ்வு எமக்கு உணர்த்தியுள்ளது.வரலாறு தருகின்ற தீர்ப்பும் அதுவேயாகும் [நன்றி: தினக்குரல்]
வாளால் வளர்ந்ததா இஸ்லாம்? அறிஞர் அண்ணா
இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்று அறிஞர் அண்ணா சொன்னதாக ஒரு கட்டுரையை படித்தேன், அதை அப்படியே கீழே தருகிறேன். பிறகு இக்கட்டுரையின் கீழே "ஓமன் நாட்டு அரசருக்கு முகமது அனுப்பிய கடிதம் தரப்பட்டுள்ளது", அதையும் படியுங்கள். இதை படிக்கின்ற உங்கள் கையிலேயே முடிவை விட்டுவிடுகின்றேன்.
வாளால் வளர்ந்ததா இஸ்லாம்? அறிஞர் அண்ணா பலாச்சுளையை சுவைக்க முற்படுவோர், முதலில் மேல் தோலை நீக்கி, பிசிறுகளைக் களைந்துவிட்டு, பிறகு சுளையை எடுத்து அதிலுள்ள கொட்டைகளையும் நீக்கிவிட்டே தின்பார்கள். அதுபோன்றே மதக்கருத்துக்களையும் உணரவேண்டும். சிலர் பலாப்பழத்தின் முன் தோலையே மதம் என்கிறார்கள். அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறோம். சிலர் பிசிறுகளை ஒட்டிக் கொண்டு மதம் என்று அலைகிறார்கள். அவர்களைக் கண்டால் நமக்கு அருவருப்பாக இருக்கிறது. மற்றும் சிலர் கொட்டையுடன் பலாச்சுளையை விழுங்க முற்படுகிறார்கள். அவர்களைக் கண்டு அனுதாபப்படுகிறோம். ஆனால் உரித்தெடுத்த பலாச்சுளையைப் போன்றதுதான் இஸ்லாம். இஸ்லாம் எல்லாக்காலத்திற்கும், எல்லா நாட்டினருக்கும் பொருந்திய மதமாக அமைந்திருக்கிறது. ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஏதாவது ஒரு பிரச்சினை தோன்றினாலும் செய்ய வேண்டுவதெல்லாம் நபிகள் நாயகம் அவர்களுடைய கருத்துக்களிலிருந்து பகுத்தறிவு விளக்கம் கொடுக்க வேண்டியதுதான், எல்லாப் பிரச்சினைகளுக்கும் விடை காணமுடியும்.
பிற மதங்களிலே அற்புதங்கள் அதிகம்; அடிப்படை உண்மைகள் குறைவு. இஸ்லாத்திலே அடிப்படை உண்மைகள் அதிகம் அற்புதங்கள் குறைவாகவேயுள்ளன. இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்ற கூற்று அர்த்தமற்றது; இஸ்லாத்தை பரப்ப வாள் பயன்பட்டதில்லை. ஆனால் சிலுவை யுத்தங்களிலே இஸ்லாத்தைக் காக்க அது பயன்பட்டதுண்டு. இந்தியாவில் முகலாயர் ஆட்சியும் மற்ற முஸ்லிம் மன்னர்கள் ஆட்சியும் இருந்தபோது முஸ்லிம்கள் ஒரு கோடி பேர் கூட இருக்கவில்லை. அந்த அரசுகளெல்லாம் மறைந்த பிறகே பத்து கோடி மக்களாகப் பெருகினார்கள். "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ன நன்னெறி பரவியிருந்த நாட்டிலே இடையிலே அக்கருத்துக்களெல்லாம் மறந்திருந்த நிலையில் இஸ்லாம் அக்கருத்துக்களையே வலியுறுத்தவும், 1300 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் இஸ்லாம் பரவிற்று. தொட்டிலிலே படுத்துறங்கும் குழந்தையைத் தட்டி எழுப்பிய உடனே தாயை எப்படி கட்டியணைத்துக் கொள்கிறதோ அவ்வாறே தமிழகத்தில் இஸ்லாமிய கருத்துக்கள் தழுவப்பட்டன.
தொகுப்பு : தமிழண்ணா
வாளால் வளர்ந்ததா இஸ்லாம்? அறிஞர் அண்ணா பலாச்சுளையை சுவைக்க முற்படுவோர், முதலில் மேல் தோலை நீக்கி, பிசிறுகளைக் களைந்துவிட்டு, பிறகு சுளையை எடுத்து அதிலுள்ள கொட்டைகளையும் நீக்கிவிட்டே தின்பார்கள். அதுபோன்றே மதக்கருத்துக்களையும் உணரவேண்டும். சிலர் பலாப்பழத்தின் முன் தோலையே மதம் என்கிறார்கள். அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறோம். சிலர் பிசிறுகளை ஒட்டிக் கொண்டு மதம் என்று அலைகிறார்கள். அவர்களைக் கண்டால் நமக்கு அருவருப்பாக இருக்கிறது. மற்றும் சிலர் கொட்டையுடன் பலாச்சுளையை விழுங்க முற்படுகிறார்கள். அவர்களைக் கண்டு அனுதாபப்படுகிறோம். ஆனால் உரித்தெடுத்த பலாச்சுளையைப் போன்றதுதான் இஸ்லாம். இஸ்லாம் எல்லாக்காலத்திற்கும், எல்லா நாட்டினருக்கும் பொருந்திய மதமாக அமைந்திருக்கிறது. ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஏதாவது ஒரு பிரச்சினை தோன்றினாலும் செய்ய வேண்டுவதெல்லாம் நபிகள் நாயகம் அவர்களுடைய கருத்துக்களிலிருந்து பகுத்தறிவு விளக்கம் கொடுக்க வேண்டியதுதான், எல்லாப் பிரச்சினைகளுக்கும் விடை காணமுடியும்.
பிற மதங்களிலே அற்புதங்கள் அதிகம்; அடிப்படை உண்மைகள் குறைவு. இஸ்லாத்திலே அடிப்படை உண்மைகள் அதிகம் அற்புதங்கள் குறைவாகவேயுள்ளன. இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்ற கூற்று அர்த்தமற்றது; இஸ்லாத்தை பரப்ப வாள் பயன்பட்டதில்லை. ஆனால் சிலுவை யுத்தங்களிலே இஸ்லாத்தைக் காக்க அது பயன்பட்டதுண்டு. இந்தியாவில் முகலாயர் ஆட்சியும் மற்ற முஸ்லிம் மன்னர்கள் ஆட்சியும் இருந்தபோது முஸ்லிம்கள் ஒரு கோடி பேர் கூட இருக்கவில்லை. அந்த அரசுகளெல்லாம் மறைந்த பிறகே பத்து கோடி மக்களாகப் பெருகினார்கள். "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ன நன்னெறி பரவியிருந்த நாட்டிலே இடையிலே அக்கருத்துக்களெல்லாம் மறந்திருந்த நிலையில் இஸ்லாம் அக்கருத்துக்களையே வலியுறுத்தவும், 1300 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் இஸ்லாம் பரவிற்று. தொட்டிலிலே படுத்துறங்கும் குழந்தையைத் தட்டி எழுப்பிய உடனே தாயை எப்படி கட்டியணைத்துக் கொள்கிறதோ அவ்வாறே தமிழகத்தில் இஸ்லாமிய கருத்துக்கள் தழுவப்பட்டன.
தொகுப்பு : தமிழண்ணா
No comments:
Post a Comment