தற்போதைய செய்திகள்:

♣ என் இனிய வலைப்பூ விருந்தினரே வருக.! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக.! ரமலான் நல் வாழ்த்துக்கள் ♣ .

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

உங்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், இப்புதிய ஆண்டில் எமது தளத்தை எளிதில் பார்வையிட புதியதாக http://www.thahirknr.co.cc/ என்ற தளத்தின் மூலமாகவும் காணலாம், தங்களின் ஆதரவே எனது தூண்டுகோள்.

Oneindia.in - thatsTamil

SunPower

Monday, April 16, 2012

வலிநீக்கும் ஆன்மிக வழி


 இறைவனின் திருப்பெயர் போற்றி
 
வலிபோக்கும் ஆன்மீக வழிகள்  
 
عن عثمان بن ابى العاص الفقى انه شكا الى رسول الله صلى الله عليه و سلم وجعا يجده فى جسده منذ اسلم  فقال رسول الله صلى الله عليه و سلم ضع يدك على الدي يألم من جسدك و قل باسم الله ثلاثا و قل سبع مرات اعوذ بالله و قدرته من شر ما اجد و أحادر
 
 
 
 உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் நபித்தோழர்
உஸ்மான் பின் அபில் ஆஷ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வந்து முறையிட்டார்கள். நான் இஸ்லாத்தை ஏற்றதிலிருந்து
என் உடலின் ஒரு பகுதியில் வலியை உணர்கிறேன் என்று, அதற்கு நபிகள் பெருமான் கூறினார்கள் " உன் உடலின் வலிக்கிற
பகுதியில் உன் கையை வைத்து பிஸ்மில்லாஹ் என்று மூன்று முறை கூறவும் பின்னர் ஏழு தடவை அவூது
பில்லாஹி வ குத்ரதிஹி மின் ஷர்ரி மா அஜ்து வ உஹாதிர் என்று கூறவும். (நூல்: முஸ்லிம்)
இதே ஹதீஸ் இன்னும் இரு இடங்களில் சிறி்ய வார்த்தை மாற்றங்களோடு வருகிறது. அதில் அவூது பி இஜ்ஜதில்லாஹி வ
குத்ரதிஹி மின் ஷர்ரி மா அஜ்து வ உஹாதிர் என்று " இஜ்ஜதில்லா " என்ற வார்த்தை சேர்த்து வருகிறது.
இன்னும் அந்த நபித்தோழர் கூறுவதாக பதிவு செய்யப்பட்டுள்ளது " நான் நபியவர்கள் கூறியது போன்று செய்தேன் அல்லாஹ்
என் வலியைப்போக்கினான் இன்னும் எனக்கு பரிபூரண சுகத்தையும் தந்தான். அதன் பின் என் குடும்பத்தார்களும்,
மற்றவர்களும் வலி என்று முறையிடும் போதேல்லாம் நான் அவர்களுக்கு இந்த துஆவைக் கற்றுக்கொடுக்க
தவறுவதில்லை".
இன்னொரு இடத்தில் " வலியினால் நான் உயிர் மாண்டு போகும் நிலையில் இருந்தேன்" என்றும் வருகிறது.
இந்த ஹதீஸ் சமூகத்திற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.
இந்த துஆவின் பொருள் " அல்லாஹ்வின் முழுமையான கண்ணியத்தைக்கொண்டும், இன்னும் அவன் சக்தியைக்கொண்டும்
நான் உணரும் இந்த வலியை விட்டும், இன்னும் இதன் மூலம் எதுவும் வியாதிவந்து விடுமோ என்ற எண்ணதை விட்டும்
அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகிறேன்".
நபி மருத்துவம் என்பது இன்றும் உலகில் கோலேச்சிக்கொண்டிருக்கிற ஒரு செய்தியாக இருக்கிறது.
நபி பெருமான் எவ்வாறு உலகில் உள்ள எல்லா துறைகளுக்கு அது சமயம், அரசியல், பொருளாதாரம், வாழ்வியல்,
இலக்கணம், இலக்கியம் என்ற நிலைகளில் சிறந்த முன்னோடியாக இருந்தார்களோ அது போன்றே மருத்துவத்திலும்
நபிகென்று ஒரு தனி இடம் உண்டு.
நபித்தோழர்கள் தங்களின் குடும்ப செய்திகள், பொருளாதாரம், மார்க்கம் போன்றவற்றில் சந்தேகம் ஏற்படும் போது எப்படி நபி
பெருமான் அவர்கள் பக்கம் திரும்பினார்களோ அது போன்று உடல் ரீதியான் நோய்களும், அசவுரியங்களும் ஏற்படும்
போதும் நபியிடம் வந்து அதற்கான தீர்வை வேண்டி நின்றார்கள் அதன் மூலம் இந்த சமூகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் தான்
நபி மருத்துவம்.
மற்ற மருத்துவத்திற்கும் இதற்கும் உள்ள வித்தியாசம், மற்றவை மனிதனின் அறிவுகளைக்கொண்டும், அனுமானங்களைக்
கொண்டும் உருவாக்கப்பட்டவை, ஆனால் இது இறைவனின் புறத்திலிருந்து நபியின் மூலமாக மனித குலத்திற்கு
அருளப்பட்ட மிகச்சரியான செய்தியாகும்.
நாம் மேலே பார்த்த ஹதீஸ் நம்முடைய முன்னோர்களான ஸலபுகளாலும், ஆன்மீக வழிகாட்டிகளான
இறைநேசச்செல்வர்களாலும் முஜர்ரப் என்று சொல்லப்படக்கூடிய (அதை செய்து அனுபவப்பூர்வமாக அதனுடைய பயன்
அடைந்துகொண்ட செய்திகளில் இதுவும் ஒன்றாகும்).
பொதுவாக வலிகள் உடலின் மொழிகள்.
வந்திருக்கும் ஒரு நோயயோ அல்லது வரவிருக்கும் ஒரு நோய் குறித்தோ உடல் தரும் சமிக்கைகளின் வெளிப்பாடுதான்
வலிகள் .
பொதுவாக இன்று நம்மிடம் வலிகள் என்று சொன்னாலே மருந்தகங்களுக்கு செல்லாமலே புருபன் போன்ற வலி
நிவாரணிகளை பயன்படுத்தும் பழக்கம் உண்டு.
அது சாதாரண வலிகளாக இருந்தால் பரவாயில்லை ஆனால் அதுவே இதயவலி என்று சொன்னால் நாம் அப்படி
பயன்படுத்துவது இல்லை.
 
பொதுவாக எந்த மருத்துவமாக இருந்தாலும் நம்பிக்கை என்பது வேண்டும்.
 
கிட்டத்தட்ட 75 விழுக்காடு நோய் நிவாரணம் கிடைப்பதெல்லாம் நாம்  மருத்துவரிடம் சென்று விட்டோம் என்பது கொண்டோ
 
அல்லது நாம் மருந்து உட்கொள்கிறோம் என்ற எண்ணம் கொண்டோ குணமாகிறது மீதம் உள்ள 25 சதவிகித்தில் 15%
 
மருத்துவரின் வார்த்தை கொண்டும் மீதம் உள்ள வெறும் 10% மாத்திரைகளினால் சுகம் கிடைக்கிறது என்பது நான் சமீபத்தில்
 
வாசித்த  ஒரு  புத்தகத்தகவல்.
 
என்ன ஒரு அற்புதமான வைர வரிகளில் நபியவர்கள் இந்த சமுதாயத்தை பக்குவப்படுத்தி இருக்கிறார்கள்.
 
நீங்கள் மருத்துவம் செய்வதானாலும் இறைவனிடத்திலே அதற்கு முழுமையான நிவாரணத்தை கேளுங்கள்.
 
இறைவனை அன்றி உங்கள் நோய்குரிய சரியான நிவாரணத்தை யாரால் கொடுக்க முடியும்.
 
அவன் தான் உங்கள் உடலுக்கும், உங்கள் நப்ஸுக்கும் எஜமானன்.
 
அவனால் மட்டுமே அதன் இரகசியங்களை புரிந்துகொள்ள முடியும்.
 
நாம் எப்பொழுது முழு நம்பிக்கையோடு அவனிடன் முழு ஒப்படைப்பை செய்து விடுகிறோமோ அப்பொழுது அவனே அதற்கு
 
பொறுப்பாளியாக ஆகிவிடுகிறான்.
 
பொய்யே உரைக்காத சாதிகுல் அமீன் சத்தியத்தூதர் அவர்கள் கூறினார்கள் " அல்லாஹ் எந்த ஒரு நோயையும்
 
இறக்கவில்லை அதனின் நிவாரணத்தையும் இறக்கியே தவிர அதை அறிந்தவர்கள் அறிந்திருக்கிறார்கள் அதை பற்றி
 
அறியாதவர்கள் அறியாமலே இருந்து விடுகிறார்கள்".
 
நல்ல வார்த்தைகளும், நம்பிக்கைகளும் தான் நிவாரணத்தை கொண்டுவருபவை
 
இந்த ஹதீஸில் கூட நபியவர்கள் சொல்லித்தந்த மிக அழமான வார்த்தைகள் " இறைவனின் கண்ணியத்தைக்கொண்டு
 
பாதுகாப்பு  தேடுங்கள் ஏனெனில் உலகில் எல்லாம் அதற்கு முன் மண்டியிடுகின்றன, அது போன்று அவனது 
 
சக்தியைக்கொண்டும் பாதுகாப்பு தேடுங்கள் அவன் சக்தியல்லாத ஒரு சக்தி உலகில் இல்லை.
 
வெறும் வலி என்று மட்டும் நபியவர்கள் நிறுத்தவில்லை மாறாக அதன் மூலம் தோன்ற இருக்கிற அனைத்துவிதமான 
 
கெடுதிகளைவிட்டும் பாதுகாப்பு தேடினார்கள். 
 
வயிறு வலிக்கிறதா                  அல்சராக இருக்கலாம்
   
அடிவயிறு வலிக்கிறதா         சிறுநீரக கல்லாக இருக்கலாம்
 
இடது கை வலிக்கிறதா           இருதய நோயாக இருக்கலாம்
 
என்றெல்லாம் நாமாக முடிவு செய்து பயம் கொள்கிறோமே, அவை அத்தணைக்கும் இதில் நிவாரணம் உண்டு.
 
இங்கு தேவை முழுமையான 100% நம்பிக்கை மட்டுமே. என் நபி சொன்னார்கள் நான் செய்கிறேன். இறைவனிடமே
 
நிவாரணத்தை கேட்கிறேன் என்று ஆகிவிடவேண்டும்.
 
அட போங்க  " இதெல்லாம் நமக்கு ஒத்துவராதுப்பா " என்று மருந்துகளை உண்கொண்டாலும், அங்கு யார் நிவாரணத்தை
 
தர இருக்கிறார்கள், நாம் சாப்பிடும் மருந்துகளா? மருந்துகள் என்று நம்பினால் நாம் ஈமானிய நம்பிக்கைவிட்டு வெகு தூரம்
 
சென்று விட்டோம் என்று அர்த்தம்.
 
நான் மருந்து சாப்பிட்டாலும் அந்த மருந்தைக்கொண்டு ஷிபாவைத்தருவது என் ரப்பு என்ற நம்பிக்கை வரவேண்டும்.
 
சமீபமாக ஒருவரை நலம் விசாரிக்க சென்றிருந்தேன் அவர் ஒரு புற்று நோயாளி, அந்த வலியினால் அவர் படும்
 
அவஸ்தையைக்கண்டு உண்மையில் மிகவும் ஆடிப்போனேன். அல்லாஹ் அக்பர்.
 
உலகில் உள்ள அனைத்து புற்றுநோயாளிகளுக்கும் இறைவன் பரிபூரண சுகத்தை தருவானாக, அவர்கள் வலியினால்படும்
 
வேதனையிருந்து இந்த துஆவின் பரக்கத்தால் அவர்களைக்காப்பானாக.
 
இந்த துஆவினால் பிரயோஜம் அடைய நினைப்பவர்களிடம் ஒரு வேண்டுகோள், இது உங்களின் நம்பிக்கையை பொருத்தே
 
அமையும் சிலருக்கு ஒரு தடவை ஓதினால் போதும், சிலருக்கு ஆயிரமும், லட்சமும் கூட ஆகலாம்.
 
நிவாரணம் கிடைக்கும் வரை செய்தால் பலன் நிச்சயம்.
 
இறைவன் திருமறையில் கூறுகிறான் " உங்கள் துஆக்கள் மட்டும் இல்லை என்றால் அல்லாஹ் உங்களை ஒரு
 
பொருட்டாகவே கருதியிருக்க மாட்டான்"
 
 
 
நபி வழியை நம்வழியாக்குவோம்     வலியை இல்லாமல் ஆக்குவோம்.
 
 
 
- பேரா. இஸ்மாயில் ஹஸனீ
 
 

No comments:

NOTICE BOARD

இஸ்லாமிய அமைப்புகளின் இலட்சிய சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்ஹு. அன்றொரு காலம் இருந்தது: திமுக வின் கருணாநிதியும்அதிமுக வின் MGR ம் பொது நிகழ்ச்சிகளில் சந்திக்க நேர்ந்தால் தழுவிக்கொள்வார்கள் அல்லது குசலமாவது விசாரிப்பார்கள்.. ஆனால் இரு கட்சித்தொண்டர்களும் அடிதடி , கைகலப்பு , வெட்டு குத்து என அன்றாடம் மோதிக்கொள்வதை ஊடகங்கள் வழியாக அறிந்திருந்தோம். இன்றொரு காலம் இருக்கிறது: இஸ்லாமிய சமுதாய அமைப்புகளின் கண்ணியமிக்க தலைவர்கள், தங்களது கருத்து வேறுபாடுகளால் பொது நிகழ்ச்சிகளில் சந்திப்பதைக்கூட தவிர்க்க சிந்திக்கிறார்கள். ஆனால் சமுதாய அமைப்புக்களில் தங்களை உட்படுத்திக்கொண்ட அன்பிற்குரிய சகோதரர்கள் மோதிக்கொள்வதாகத் தகவல்கள் மிக அரிது.. வாதத்துக்காகவும் ,பகட்டுக்காகவும் இல்லாமல் சுய சிந்தனையோடு கூறுங்கள் சகோதரர்களே! உங்களில், ஒற்றுமை ஏற்படுவதை விரும்பாத ஒருவராவது இருக்க முடியுமா? அல்லது ''ஒற்றுமை ஏற்படாதா?'' என்று ஆதங்கப்படாத உள்ளம் தான் இருக்க முடியுமா? சமுதாயத்தலைவர்கள் தங்கள் வெட்டி கௌரவத்தை(பந்தா?) விட்டு வெளியில் வந்து பழையன மறந்து சமுதாய ஒற்றுமைக்காக புது உறவை ஏற்படுத்த மாட்டார்களா? தங்களை நல்ல முறையில் வழி நடத்த மாட்டார்களா? என்று ஏங்காத உள்ளமுடைய எவரேனும் உங்களில் இருக்க முடியுமா? நாம் சிந்தனை செய்யும் சக்தியை ஏக இறைவனால் வழங்கப்பெற்றவர்கள்...சிந்தனை செய்யுங்கள்.... ((((( 2 ))))) அனைத்து இஸ்லாமிய சமுதாய இயக்கங்களும் இலட்சியத்தில் ஒன்று படுகிறது; நோக்கம் இறைவனின் நேசத்தைப்பெற்று மறுமை வெற்றியை அடைய வேண்டும் என்பதாகத்தான் அமைந்திருக்கும். மாஷா அல்லாஹ்.நோக்கம் உன்னதமானது. ஆக, பாதைகள் தான் வெவ்வேறே தவிர இலக்கு வெவ்வேறல்ல. ஆனால் துவங்கப்பட்ட அமைப்புகள் இந்த இலட்சியத்தை அடைவதற்கான செயல்பாடுகளிலிருந்து தடம் புரள்வதேன்? துரதிர்ஷ்டவசமாக சில இயக்கங்களை நிர்வகிப்பவர்களின் செயல்பாடுகள் ''ஊசலாட்டங்களை ஏற்படுத்துபவனின்'' செயல்களைப் போன்று அமைந்து விடுகிறது. இங்கே 'மாற்றான் தோட்டத்து மல்லிகையின் மணம்' கண்டு கொள்ளப்படுவதேயில்லை; ஏனைய பண்புகளே மிகைப்படுத்தப்படுகிறது. பிற இஸ்லாமிய சமுதாய அமைப்புகளுடையவும் அதைச்சார்ந்தவர்களுடையவும் குறைகளை மிகைப்படுத்துவதையே முக்கிய இலக்காகக் கொண்டுள்ளனரோ? என்று எண்ணத்தோன்றுகிறது! படைக்கப்பட்டவனுடைய உள்ளத்தை படைத்தவன் அறிவான். படைத்தவனின் உரிமைகளை தனதாக்கிக்கொள்ள எவருக்கு தகுதியிருக்கிறது? ''இன்னமல் அஃமாலு பின் நிய்யத்''என்பதை மறப்பதேன்? நான் அல்லது நாம் செய்வது தான் சரியென்பது அவரவர் நம்பிக்கை; தீர்ப்பு செய்யும் அதிகாரம் படைத்தவனுக்குரியது. குறைகள் தெரிந்தாலும் அன்போடும் அக்கரையோடும் நளினமான முறையில் எடுத்துக்கூறும் பண்பு ஏன் இல்லாமல் போயிற்று? எங்கே இந்த சமுதாயம் அழிந்துவிடதா? என நப்பாசை கொண்டு திரிபவனுக்கு மத்தியில் நமது குறைகளை மேடைபோட்டு அரங்கேற்றுவதில் சகோதரர்களே! நீங்கள் உடன்படுகிறீர்களா? ((( 3 ))) நமது இயக்கங்களின் நிர்வாகிகள் அரசியல் குள்ளநரிகளின் சூழ்ச்சியில் விழுந்து விடும் சூழ்ச்சுமம் என்னவாக இருக்கும்? இதற்கு விடை அறிய வேண்டுமெனில் முதலில் சூழ்ச்சி என்னவென்று தெரிய வேண்டும். சமீபத்திய நிகழ்வு ஒன்றை பார்ப்போம்... நமது சமுதாய இயக்கம் ஒன்றின் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில்,, ஒரு கட்சியை வரும் பாரளுமன்றத்தேர்தலில் ஆதரிப்பது என்பதும் ஒரு தீர்மானம். இந்த முடிவு 2007 ஆம் வருடத்திலேயே எடுக்கப்பட்டது என்பது வெளியிடப்பட்ட கடிதத்தின் வாயிலாக நமக்கு இப்போது தெரிய வருகிறது. ஆனால் எழுதப்பட்ட கடிதம் யாருக்கு? நரிக்குணத்துடன் முதுகில் குத்தும் குணமுடையவருக்காயிற்றே! முன்னணி இயக்கங்களில் ஒன்றை கூட்டுப்பிடித்திருந்தும் மற்றொன்றின் ஆதரவு இல்லாததால் (கோவை மற்றும் சில இடங்கள்)பெரும்பான்மையும் கிடைக்கவில்லை; கிடைத்த இடங்களிலும் (சென்னை மற்றும் சில இடங்கள்)சொற்ப ஓட்டுக்களில் வெற்றி என்று நொந்து போயிருந்தவருக்கு அல்லவா இந்த கடிதம் எழுதப்பட்டிருக்கிறது.. 2007 ல் தகவல் கிடைக்கப்பெற்றவர் குதூகலம் அடைந்திருப்பார்! ''இந்த இஸ்லாமியர்கள் சொன்ன சொல்லைக் காப்பார்கள்'' என்பதும் ''இந்த இஸ்லாமிய இயக்கங்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்ளும் ஒற்றுமையற்ற இயக்கங்கள்'' என்பதும் புரிந்த தந்திரக்காரர் அவர்! திட்டம் வகுத்திருப்பார்!! இலவசமாக ஒரு இயக்கத்தின் ஆதரவு கிடைக்கப்போகிறது; முன்னர் ஆதரித்த இயக்கம் கூடவே இருந்தால் ஒன்றிரண்டு தொகுதிகள் கேட்டு நச்சரிப்பார்கள் ; திட்டம் வகுத்து கழற்றி விட்டுவிட்டார்.. சூடு, சொரணையற்ற இளிச்சவாயர் கூட்டத்தின் பகுதி ஓட்டுக்கள் இலவசமாகக் கிடைக்கும் போது மற்றொரு பகுதியில்லாமலே (அதுவும் சிதறி விடும்)இந்த சமுதாயத்தை சமாளித்து விடலாம் என்று சூழ்ச்சி செய்தார். சரி, அவர் சூழ்ச்சி செய்தார்! அது அவரது அரசியல்! நம்மவர்கள் எப்படி சூழ்ச்சியில் விழுந்தார்கள்? என்றெல்லாம் (இஸ்லாமிய இயக்கங்களின் இலட்சிய சகோதரர்களே) நீங்கள் கேட்க விரும்புகிறீர்கள் என்றால் ........மகிழ்ச்சி.........நீங்களும் சிந்திக்க ஆரம்பித்து விட்டீர்கள் என்று பொருள். இன்ஷா அல்லாஹ்... தொடருவேன்... சமுதாய ஒற்றுமையை விரும்பும் ஒரு சாதாரண சகோதரன்... நாஞ்சில் தமிழ்.

திக்ருகள்‏

திக்ரு என்பது இறைவனை நினைவு கூறுவதாகும்.. மனிதன் இறைவனின் நினைவுகளோடு இவ்வுலகில் வாழ வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைபாடு. இது மனிதனை வெற்றிக்கு இட்டுச் செல்லும் வழியாகும். ஐவேளை தொழுகை கூட இறைவனை நினைவு கூறக்கூடியதாகவே அமைந்துள்ளது. தொழுகை நேரம் போக அன்றாட வாழ்க்கையின் மற்ற நேரங்களிலும் இறைவனை நினைவு கூறுவதற்கு சில திக்ருகளை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.. அதற்கு முன் திக்ரு செய்வதன் சிறப்புகளை அறிந்து கொள்வது அவசியமாகும். திக்ருகளின் சிறப்புகள் : فَاذْكُرُونِي اَذْكُرُكُمْ 'என்னை நீங்கள் நினைவு கூறுங்கள், நானும் உங்களை நினைவு கூறுவேன்' (அல்குர்ஆன் 2:152) நாம் அல்லாஹ்வை திக்ரு செய்தால் அல்லாஹ் நம்மை நினைவு கூறுகிறான். இது எவ்வளவு பெரிய பாக்கியம் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். وَاذْكُرْ رَبَّكَ فِيْ نَفْسِكَ تَضَرُّعًا وَخِيْفَةً وَدُوْنَ الجَهْرِ مِنَ القَوْلِ بِالْغُدُوِّ وَالآصَالِ وَلاَ تَكُنْ مِنَ الغَافِلِيْنَ '(நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும் (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும் மாலையிலும் உம் இறைவனின் (திருநாமத்தை) திக்ரு செய்து கொண்டு இருப்பீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம்' (அல்குர்ஆன் 7:205) திக்ரு எவ்வாறு செய்ய வேண்டும் என்ற முறையை இறைவன் இங்கே நமக்கு கற்றுத் தருகிறான். يَأيُّهَا الَّذِينَ ءَامَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا ، وَسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا 'ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமான திக்ரைக் கொண்டு திக்ரு செய்யுங்கள்.. இன்னும் காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்யுங்கள்' (அல்குர்ஆன் 33:41,42) அல்லாஹ்வை அதிகமதிகம் திக்ருச் செய்ய வேண்டும், காலையிலும் மாலையிலும் அதிகமதிகம் செய்ய வேண்டும் என்பது இதன் பொருளாகும். காலையிலும் மாலையிலும் மட்டும் திக்ருச் செய்தால் போதும் என்பது இதன் பொருள் அல்ல. لاَيَقْعُدُ قَوْمٌ يَذْكُرُوْنَ اللهَ عَزَّ وَجَلَّ إِلاَّ حَفَّتْهُمُ المَلاَئِكَةُ وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ وَنَزَلَتْ عَلَيْهِمُ السَّكِيْنَةُ ، وَذَكَرَهُمُ اللهُ فِيْمَنْ عِنْدَهُ (رواه مسلم) 'அல்லாஹ்வை திக்ரு செய்தவர்களாக அமரும் கூட்டத்தினரை மலக்குகள் சூழ்ந்தும், ரஹ்மத் (இறையருள்) அவர்களை மூடியும் 'ஸகீனா' என்னும் நிம்மதி அவர்கள் மீது இறங்கியுமே தவிர வேறில்லை. அல்லாஹ் தன்னிடமுள்ளவர்களிடம் (மலக்குகளிடம்) அவர்களைப் பற்றி (புகழ்ந்து) கூறுகிறான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்கள்: அபூஹுரைரா (ரலி), அபூ ஸயீது (ரலி) நூல்: முஸ்லிம்) திக்ரு செய்வோரை மலக்குகள் சூழ்ந்து இருப்பார்கள், மனிதன் சுவர்க்கம் செல்ல அவசியம் தேவைப்படும் இறையருள் அங்கே இறங்குகிறது, நிம்மியும் இறங்குகிறது. அல்லாஹ் அவர்களைப் பற்றி புகழ்ந்து கூறுகிறான் போன்றவற்றை இழக்க எவருக்குத் தான் மனம் வரும். மற்றொரு ஹதீஸில், அல்லாஹுத்தஆலாவின் சில மலக்குகள், திக்ரு செய்பவர்களைத் தேடியவர்களாக பாதையில் சுற்றுவார்கள். அல்லாஹுத்தஆலாவை திக்ரு செய்யும் கூட்டத்தாரை அவர்கள் கண்டால் உடனே, 'இதோ இங்கு உங்கள் குறிக்கோளின் பக்கம் வாருங்கள்' என அவர்கள் ஒருவருக்கொருவர் அழைப்பு விடுப்பார்கள். உடனே அனைத்து மலக்குகளும் அங்கு வந்து, திக்ரு செய்யும் கூட்டத்தாரை முதல் வானம் வரை சூழ்ந்து கொள்வார்கள். பிறகு அவர்களின் இரட்சகனான அல்லாஹ் - அவன் மிக அறிந்தவன் - என் அடியார்கள் என்ன கூறினார்கள்? என்று கேட்பான். அதற்கவர்கள், உன்னை தஸ்பீஹ் செய்கிறார்கள், உன்னை தக்பீர் கூறுகிறார்கள், உன்னை புகழ்கிறார்கள், உன்னை கண்ணியப்படுத்துகிறார்கள் எனக் கூறுவார்கள். அதற்கவன், என்னை அவர்கள் பார்த்துள்ளார்களா? என்று கேட்பான். அதற்கவர்கள் இல்லை, அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்கள் உன்னைப் பார்க்கவில்லை என்பார்கள். அதற்கு அல்லாஹ், அவர்கள் என்னைப் பார்த்திருந்தால் எவ்வாறு இருப்பார்கள்? எனக் கேட்பான். அதற்கு மலக்குகள், அவர்கள் உன்னைப் பார்த்திருந்தால், இன்னும் மிக அதிகமாக உன்னை வணங்குபவர்களாகவும், மிக அதிகமாக உன்னைக் கண்ணியப்படுத்துபவர்களாகவும், மிக அதிகமாக உன்னை தஸ்பீஹ் செய்பவர்களாகவும் இருப்பார்கள் எனப் பதிலளிப்பார்கள். பிறகு அல்லாஹ், அவ்வடியார்கள் என்ன கேட்டார்கள்? என்று அவர்களிடம் கேட்பான். அதற்கவர்கள், அவர்கள் உன்னிடம் சுவர்க்கத்தை கேட்டார்கள் எனக் கூறுவார்கள். அதற்கு அல்லாஹ், அவர்கள் அதனைப் பார்த்துள்ளார்களா? என்று கேட்பான். அதற்கு மலக்குகள், இல்லை, அல்லாஹ்வின் மீது ஆணையாக! எங்கள் இரட்கனே! அவர்கள் அதனைப் பார்க்கவில்லை எனப் பதிலளிப்பார்கள். அதற்கு அல்லாஹ், அவர்கள் அதனைப் பார்த்திருந்தால் எவ்வாறு இருக்கும்? என்று கேட்பான். அதற்கு மலக்குகள், அவர்கள் அதனைப் பார்த்திருந்தால் அதன் மீது மேலும் பேராசைக் கொள்வார்கள், அதிகமாகத் தேடுவார்கள், அதனை அடைய அளப்பெறும் ஆவல் கொள்வார்கள் எனக் கூறுவார்கள். பின்னர் அவர்கள் எதனை விட்டுப் பாதுகாவல் தேடுகிறார்கள் என மலக்குகளிடம் அல்லாஹ் கேட்பான். அதற்கவர்கள், அவர்கள் நரகை விட்டுப் பாதுகாவல் தேடுகின்றனர் என்பர். அவர்கள் அதனைப் பார்த்துள்ளார்களா? என்று அல்லாஹ் கேட்பான். அதற்கவர்கள், இல்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்கள் அதனைப் பார்க்கவில்லை என மறுமொழி கூறுவார்கள். அவர்கள் அதனைப் பார்த்திருந்தால் எவ்வாறு? என்று அல்லாஹ் கேட்பான். அதற்கவர்கள், அவர்கள் அதைப் பார்த்திருந்தால் இதைவிட மிக அதிகமாக அதனை விட்டு விரண்டோடுவார்கள். கடுமையாக அதனை அஞ்சுவார்கள் எனப் பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ் (மலக்குகளே) நான் அவர்களை மன்னித்து விட்டேன். அதற்கு உங்களைச் சாட்சிகளாக ஆக்குகிறேன் என்று கூறுவான். அப்போது மலக்குகளில் ஒருவர் அவர்களில் ஒருவர் திக்ர் செய்தவர்களின் கூட்டத்தில் உள்ளவரல்ல, ஏனெனில் அவர் அவரது ஏதோ ஒரு தேவைக்காக அங்கு வந்தார் எனக் கூறுவார். அதற்கு அல்லாஹ், திக்ரு செய்தவர்களாக அமர்ந்திருந்தவர்களுடன் சேர்ந்து அமர்ந்து இருந்த எந்த மனிதரும் நற்பாக்கியத்தை இழக்க மாட்டார். (அவரும் நற்கூலி பெறுவார்) எனக் கூறுவான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) மற்றொரு ஹதீஸில், அபூ வாகித் அல் ஹாரிஸ் பின் அவ்ப் (ரலி) அறிவிக்கிறார்கள்: அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதில் அமர்ந்து இருந்தார்கள். மக்களும் அவர்களுடன் அமர்ந்து இருந்தார்கள்.. அப்போது மூன்று நபர்கள் வந்தார்கள். அவர்களில் இருவர் நபி (ஸல்) அவர்களின் சமூகம் முன்னோக்கி வந்தனர். ஒருவர் போய் விட்டார். அவ்விருவரும் நபியவர்களின் அவையில் சிறிது நேரம் நின்று கொண்டிருந்தார்கள். அப்போது அவ்விருவரில் ஒருவர் அவ்வட்டத்தில் ஒரு காலியிடத்தைப் பார்த்தார்... உடனே அவர் அதில் போய் அமர்ந்தார். மற்றொருவர் அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து கொண்டார். நபி (ஸல்) அவர்கள் தங்களின் சொற்பொழிவை நிறைவு செய்ததும் கூறினார்கள்: மூன்று நபர்களைப் பற்றி உங்களுக்கு நான் அறிவித்துத் தரட்டுமா? அவர்களில் ஒருவர் அல்லாஹ்வின் பக்கம் ஒதுங்கினார். அல்லாஹ் சேர்த்துக் கொண்டான். மற்றொருவர் வெட்கப்பட்டார். அல்லாஹ்வும் அவரிடமிருந்து வெட்கப்பட்டுக் கொண்டான். இன்னொருவர் புறக்கணித்துச் சென்றுவிட்டார். அல்லாஹ்வும் அவரைப் புறக்கணித்து விட்டான். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்) ஒரு நாள் முஆவியா (ரலி) அவர்கள் மஸ்ஜிதில் அமர்ந்திருந்த ஒரு திக்ரின் ஹல்காவிற்கு (வட்டத்திற்கு) வந்தார்கள். அப்போது அவர்களைப் பார்த்து, நீங்கள் ஏன் இங்கு அமர்ந்து இருக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கவர்கள், நாங்கள் அல்லாஹ்வை திக்ரு செய்தவர்களாக அமர்ந்துள்ளோம் என மறுமொழி கூறினார்கள். அதற்கு முஆவியா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீது ஆணையாக! அதைத்தவிர வேறு எதற்காகவும் நீங்கள் இங்கு உட்காரவில்லையே? என்றார்கள். அதற்கவர்கள், அதைத்தவிர வேறு எதற்காகவும் நாங்கள் இங்கு உட்காரவில்லை எனக் கூறினார்கள். அதற்கு முஆவியா (ரலி) அவர்கள், நான், 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக!' என்று உங்களிடம் கேட்டது உங்கள் மீது சந்தேகப்பட்டு அல்ல. (எனினும் உங்கள் நோக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகத்தான்.) நான் நபி (ஸல்) அவர்களிடம் சிறப்பான அந்தஸ்தைப் பெற்றிருந்தும் (பேணுதலின் காரணமாக) அவர்களைப் பற்றி மிகக் குறைவாகவே ஹதீஸ்களை அறிவிக்கின்றேன். அவைகளில் ஒன்று. ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களின் ஒரு ஹல்காவிற்கு (வட்டத்திற்கு) வந்தார்கள். ஏன் இங்கு அமர்ந்துள்ளீர்கள்? என்று அவர்களிடம் வினவினார்கள். அதற்கவர்கள், 'நாங்கள் அல்லாஹ்வை திக்ரு செய்தவர்களாகவும், எங்களுக்கு இஸ்லாமுக்கு வழிகாட்டி எங்கள் மீது அருள் புரிந்ததற்காக அல்லாஹ்வைப் புகழ்ந்தவர்களாகவும் அமர்ந்துள்ளோம் எனக் கூறினார்கள். அப்போது, நபியவர்கள், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் அதற்காகவே அமர்ந்துள்ளீர்களா?' என்றார்கள். அதற்கவர்கள், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! அதற்காகவே நாங்கள் அமர்ந்துள்ளோம்' என்று கூறினார்கள். அப்போது நபியவர்கள், நான் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்று உங்களிடம் கேட்டது உங்கள் மீது சந்தேகப்பட்டு அல்ல, எனினும் (இப்பொழுதுதான்) ஜிப்ரீல் (அலை) என்னிடம் வந்தார்கள். நிச்சயமாக அல்லாஹ் தன் மலக்குகளிடம் உங்களைப் பற்றி பெருமை பாராட்டுகின்றான் என அவர்கள் என்னிடம் கூறினார்கள்' எனப் பகர்ந்தார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீதில் குத்ரீ (ரலி), நூல்: முஸ்லிம்

1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்களை தரப்பட்ட இணைப்பின் மூலம் பெறலாம்

1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்களை தரப்பட்ட இணைப்பின் மூலம் பெறலாம்
இதை Print செய்து தேவையான மாணவர்களுக்கு கொடுத்து உதவலாம்.