தற்போதைய செய்திகள்:

♣ என் இனிய வலைப்பூ விருந்தினரே வருக.! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக.! ரமலான் நல் வாழ்த்துக்கள் ♣ .

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

உங்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், இப்புதிய ஆண்டில் எமது தளத்தை எளிதில் பார்வையிட புதியதாக http://www.thahirknr.co.cc/ என்ற தளத்தின் மூலமாகவும் காணலாம், தங்களின் ஆதரவே எனது தூண்டுகோள்.

Oneindia.in - thatsTamil

SunPower

Sunday, May 6, 2012

தாயின் கருவறை ரகசியம் என்ன வென்று தெரியுமா ?........



 பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! 17:24
அல்லாஹ் கூறுகிறான்.



அவனையன்றி (வேறு எவரையும்) நீங்கள் வணங்கக்கூடாது என்றும் பெற்றோருக்கு
நன்மை செய்ய வேண்டுமென்றும். உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்.
அவ்விருவரில் ஒருவரோ அல்லது இருவரோ உம்மிடத்தில் முதுமை அடைந்து
விட்டால், அவர்களை ச்சீ என்று (கூட) சொல்ல வேண்டாம் மேலும் அவ்விருவரையும்
   
( உம்மிடமிருந்து ) விரட்ட வேண்டாம். மேலும் அவ்விருவரிடமும் கனிவான,

கன்னியமான பேச்சையே பேசுவீராக! இன்னும் இரக்கம் கொண்டு பணிவு என்னும்
இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக! மேலும் என் இறைவனே! நான்
சிரு பிள்ளையாக இருந்த போது என்னை(ப் பரிவோடு) இவ்விருவரும் வளர்த்தது போல்,
நீயும் அவ்விருவருக்கும் கிருபை செய்வாயாக! என்று கூறிப்பிரார்த்திப்பீராக!
அல்குர்ஆன்: 17.23,24


தாயின் கருவறை ரகசியம் என்ன வென்று தெரியுமா ?........

நேற்றைய தினம் தைக்கால் பள்ளி இமாம் அஹமது மீரான் ஹஜரத்
அவர்கள் KEO சார்பாக நடைபெற்ற
நேரிய இஸ்லாமிய வழியில் பெண்கள் என்ற தலைப்பில்
பெண்களுக்கான கோடைகால சிறப்பு பயிற்சி முகாம்
சுவன பூங்கா வை கடந்து செல்ல நாடினால் ... எனும்
தலைப்பில் ஆற்றிய உரையை பார்த்தோம் ..மேலும் ஹஜரத் பெருந்தகை
தனது உரையில் தாயின் கருவறை ரகசியத்தை பற்றி பேசிய பேச்சை கேட்ட
போது மேற்குருபிட்டுள்ள இறைமறை வசனம் எனது யாபகத்திற்கு வந்தது ...
அதனால் தான் இதனை எழுதிவிட்டு ஹஜரத் உரைக்கு நுழைகிறேன்....

  
பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! 17:24
வல்ல அல்லாஹ் தனது வான்மறையில் எத்தனை பொருள்பட பெற்றோரை
பேண வேண்டும் என குருபிடுகிறான் ....ஆனால் இன்று நடை முறையில் என்ன
நடக்கிறது ? கணவனை இழந்த தாயை கவனிக்க திராணி இல்லாத மனிதர்கள்
சமூகத்தில்
இன்று பகட்டாக வலம்வருவதை யும் தனது விளம்பரத்திற்காக வியாபாரத்திற்காக
பள்ளிவாசல்களுக்கு மின்விசிறிகளை விளம்பரபடுத்தி அன்பளிப்பு
செய்வதையும்,மீலாது
விழாக்களில் மேடைகளை ஆக்கிரமித்து மின்விளக்குகளால் தங்களால்தான் சீரும்
சிறப்புமாக சீரத் மாநாடுகளை நடத்திட முடியும் என மார்தட்டி கொள்வதையும் தன்னை சீராட்டி பாலுட்டி வளர்த்த அன்னையை புறக்கணித்து விட்டு இப்படியெல்லாம் நவீன மனிதர்கள் நடைபோட்டு கொண்டிருப்பதை நம்மால் பார்க்கத்தான் முடிகிறது .......
ஆனால் ஹஜரத் அவர்களின் பேருரையில் ..குழந்தை பருவத்தை குருப்பிடும் போது.......
குழந்தை பருவத்தை வரலாற்று ஆசிரியர்கள் பகுத்து பார்க்கும் போது
பல்வேறு கால அளவை குருபிடுவார்கள் .குழந்தை நல்லது எது கேட்டது எது
என பிரித்து பார்க்கும் தருணம் வரை குழந்தை பருவம் தான் என சொல்லுவார்கள் ..
குழந்தை பருவம் என்பது மிக மிக முக்கிய பருவம் .இரண்டாவது தாய்மை பருவம் இது
தான் மிக முக்கியமான பருவம் .குழந்தைகளின் தேவைகள் அறிந்து தாய் அவளை
 ஆளாக்கும் பருவம் .மூன்றாவது பருவம் வயோதிக பருவம் ..
இரண்டாவது பருவத்தில் பிள்ளைகள் தாயை சார்ந்தும்
மூன்றாவது பருவத்தில் தாய் பிள்ளைகளை சார்ந்து இருக்கும் பருவமாகும் .இந்த
மூன்றுவிதம்மான பருவத்தையும் நமது மார்க்கம் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டுமென தெள்ள தெளிவாக சொல்லி இருக்கிறது....
இதிலே குழந்தை பருவத்தை இஸ்லாம் மிக முக்கிய தருணமாக சொல்லி
காட்டுகிறது .நான் ஏற்கெனவே சொன்னதுபோல ஒரு கட்டிடத்திற்கு எப்படி அஸ்திவாரம் முக்கியமோ அதுபோல குழந்தைகளை நன்கு  கவனித்து நாம் பேனுதளோடு ஆளாக்கும் பருவம் குழந்தை பருவம் .ஒரு குழந்தை ஆறு மாதத்தில் இருந்து பேச துவங்குகிறது ...அந்த காலகட்டத்தில்
நாம் நமது பழக்க வழக்கங்களை சீராக அமைத்து கொண்டால் கூர்ந்து நம்மை கவனிக்கும் குழந்தை அதனை எளிதாக  பின்பற்றும் .குழந்தைக்கும் குழந்தையின் தாயிக்கும் அல்லாஹ் தொப்புள் கொடி
உறவை வைத்திருக்கிறான் ..இந்த தொப்புள் கொடி உறவு என்பது உணர்வு சார்ந்தது ! உதாரணமாக குழந்தை தொட்டியிலே உறங்கும் போது திடிரென அழுகிறது என்று சொன்னால் அடுப்படியிலே நிற்கும் தாய் ஓடோடி வந்து குழந்தையை வாரி அணைத்து கொள்கிறாள் .நெஞ்சோடு தாய் அணைத்தவுடன் குழந்தை அழுகையை நிறுத்தி விடுகிறது என்றால் ..
இந்த ஸ்பரிசம் அதற்க்கு அனுபவ பட்டதாக இருக்கிறது ..வேறு வேலையாள் வந்து தூக்கினால் குழந்தை அழுகையை நிறுத்துவதில்லை ..காரணம் என்ன மனோதத்துவ நிபுணர்கள் சொல்லுகிறார்கள் ..
ஒரு தாயின் கருவறையில் நான்காவது மாதத்தில் குழந்தைக்கு உயிர் கொடுக்க படுகிறது ..நபிகள் பெருமானார் ஸல் அவர்களும் இதை தான் சொல்லுகிறார்கள் ..நான்காவது மாதத்தில் இருந்து அந்த குழந்தை தாயின் கருவறையில் அவளின் இதய துடிப்பை கேட்க கேட்க அதனை பழக்க படுத்தி கொள்கிறது .அந்த தாயின் உடல் அமைப்பு அந்த குழந்தைக்கு ஏற்று கொள்ள கூடியதாக
அமைந்து விடுகிறது .இந்த நான்கு மாதத்தில் துவங்கும் துடிப்பு கருப்ப அறையில்  வெளிவரும் வரை கேட்க பழகி விட்டதினால் வெளியிலே அழும் குழந்தையை தாய் நெஞ்சோடு ஆற அணைக்கும் போது ஏற்கெனெவே கேட்ட துடிப்பு என்பதினால் அழுகையை நிறுத்தி விடுகிறது .வல்ல அல்லாஹ் ஒரு தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள உறவு பாலத்தை உணர்வு பாலத்தை இப்படி
 தெளிவாக படம் பிடித்து காட்டுகிறான் .
எனவே தான் தாய்மை பருவத்தில் குழந்தைக்கு ஒரு தாய் எதை போதிகிறாலோ  அதை அப்படியே எடுத்து கொள்கிறது .எனவே தான் குழந்தை பருவம் மிக முக்கிய பருவம் என்று குருபிடுகிறோம் .
அதனை தொடர்ந்து இரண்ட்டவது கட்டம் தாய்மை பருவம் ...இந்த பருவத்தில் தனது பிள்ளைகளுக்காக தாய் தன்னை முற்றிலுமாக அர்ப்பணித்து கொள்ளும் காலமாகும் .மூன்றாவது வயோதிக பருவம் வருங்கால சந்ததிகளுக்கு சிறந்த முன்னுதாரணமாக நம்மை முறைபடுத்தி கொள்ளும் பருவமாகும் .
இப்படி இந்த மூன்று பருவத்திலும் எப்படி நாம் நடந்து கொள்ள வேண்டுமென நமது
மார்க்கம் சிறப்பாகவே சொல்லித்தருகிறது .
இன்றைக்கு பெண்களின் நிலைகளை பார்கின்றோம் ..பெருமானார் ஸல் அவர்கள்
பெண்களை பற்றி அற்புதமாக விவரிதுள்ளர்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஹஜ்ஜதுல் விதாவில் அரபா பெருவெளியில் நிகழ்த்திய உரை ..உலக வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட உரை .அந்த உரையில் மிக முக்கியமாக பெருமானார் ஸல் அவர்கள் வலியுறுத்தி சொன்னது பெண்கள் விசயத்தில் அவர்களது உரிமைகளை நீங்கள் பேணி கொள்ளுங்கள் என்பதாகும் . அப்படியானால் பெண்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தந்து பேசியுள்ளார்கள்
 என்பதை புரிந்து கொள்ளலாம் .
மதினாவில் சஹாபாக்கள் முன்னிலையில் ஒருமுறை உரையாற்றும் போது இரண்டு பலகீனமானவர்களை உங்களுக்கு அடையாளம் காட்டுகிறேன் ...அவர்களது உரிமைகளை நீங்கள் பாது காத்து கொள்ளுங்கள் என்று உங்களை எச்சரிக்கை செய்கிறேன் ...
சஹாபாக்கள் கேட்டார்கள் யாரசூலுல்லாஹ் ...யார் அவர்கள் .. பெருமானார் ஸல் அவர்கள் சொன்னார்கள் ...ஒன்று எத்திமானவர்கள் (அனாதைகள் ) மற்றொண்டு பெண்கள் ..
அனாதைகள் பலகீனமானவர்கள் தான் அதன் காரணம் உங்களுக்கு புரியும் ..பெற்றோர் இல்லாதவர்கள் ..
ஆனால் பெண்கள் ஏன் பலகீனமானவர்களாக குருபிட்டர்கள் என்பதை நாம் ஆழ்ந்து  
சிந்திக்க வேண்டும் .
அத்தகைய பெண்களுக்கு சைத்தானின் சூழ்ச்சியில் எளிதாக வீழ்ந்து விட கூடியவர்கள் ..ஆகவேதான் நாம் கண்ணும் கருத்துமாய் பெண்களை பலகீனமானவர்களாய் கருதி ஆண் மக்கள்
 விட்டு கொடுத்து நீதமுடம் நடந்து கொள்ள வேண்டும் .................இவாறு ஹஜரத் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள் .



KEO நிர்வாகிகளுக்கு மிக முக்கிய 2 கோரிக்கைகளை முன்வைப்பேன்...ஜமாத்தார்
முன்னிலையில் ...


அது என்ன முக்கிய கோரிக்கை ?? நாளை பார்ப்போமே .....

ABDUL ALEEM

No comments:

NOTICE BOARD

இஸ்லாமிய அமைப்புகளின் இலட்சிய சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்ஹு. அன்றொரு காலம் இருந்தது: திமுக வின் கருணாநிதியும்அதிமுக வின் MGR ம் பொது நிகழ்ச்சிகளில் சந்திக்க நேர்ந்தால் தழுவிக்கொள்வார்கள் அல்லது குசலமாவது விசாரிப்பார்கள்.. ஆனால் இரு கட்சித்தொண்டர்களும் அடிதடி , கைகலப்பு , வெட்டு குத்து என அன்றாடம் மோதிக்கொள்வதை ஊடகங்கள் வழியாக அறிந்திருந்தோம். இன்றொரு காலம் இருக்கிறது: இஸ்லாமிய சமுதாய அமைப்புகளின் கண்ணியமிக்க தலைவர்கள், தங்களது கருத்து வேறுபாடுகளால் பொது நிகழ்ச்சிகளில் சந்திப்பதைக்கூட தவிர்க்க சிந்திக்கிறார்கள். ஆனால் சமுதாய அமைப்புக்களில் தங்களை உட்படுத்திக்கொண்ட அன்பிற்குரிய சகோதரர்கள் மோதிக்கொள்வதாகத் தகவல்கள் மிக அரிது.. வாதத்துக்காகவும் ,பகட்டுக்காகவும் இல்லாமல் சுய சிந்தனையோடு கூறுங்கள் சகோதரர்களே! உங்களில், ஒற்றுமை ஏற்படுவதை விரும்பாத ஒருவராவது இருக்க முடியுமா? அல்லது ''ஒற்றுமை ஏற்படாதா?'' என்று ஆதங்கப்படாத உள்ளம் தான் இருக்க முடியுமா? சமுதாயத்தலைவர்கள் தங்கள் வெட்டி கௌரவத்தை(பந்தா?) விட்டு வெளியில் வந்து பழையன மறந்து சமுதாய ஒற்றுமைக்காக புது உறவை ஏற்படுத்த மாட்டார்களா? தங்களை நல்ல முறையில் வழி நடத்த மாட்டார்களா? என்று ஏங்காத உள்ளமுடைய எவரேனும் உங்களில் இருக்க முடியுமா? நாம் சிந்தனை செய்யும் சக்தியை ஏக இறைவனால் வழங்கப்பெற்றவர்கள்...சிந்தனை செய்யுங்கள்.... ((((( 2 ))))) அனைத்து இஸ்லாமிய சமுதாய இயக்கங்களும் இலட்சியத்தில் ஒன்று படுகிறது; நோக்கம் இறைவனின் நேசத்தைப்பெற்று மறுமை வெற்றியை அடைய வேண்டும் என்பதாகத்தான் அமைந்திருக்கும். மாஷா அல்லாஹ்.நோக்கம் உன்னதமானது. ஆக, பாதைகள் தான் வெவ்வேறே தவிர இலக்கு வெவ்வேறல்ல. ஆனால் துவங்கப்பட்ட அமைப்புகள் இந்த இலட்சியத்தை அடைவதற்கான செயல்பாடுகளிலிருந்து தடம் புரள்வதேன்? துரதிர்ஷ்டவசமாக சில இயக்கங்களை நிர்வகிப்பவர்களின் செயல்பாடுகள் ''ஊசலாட்டங்களை ஏற்படுத்துபவனின்'' செயல்களைப் போன்று அமைந்து விடுகிறது. இங்கே 'மாற்றான் தோட்டத்து மல்லிகையின் மணம்' கண்டு கொள்ளப்படுவதேயில்லை; ஏனைய பண்புகளே மிகைப்படுத்தப்படுகிறது. பிற இஸ்லாமிய சமுதாய அமைப்புகளுடையவும் அதைச்சார்ந்தவர்களுடையவும் குறைகளை மிகைப்படுத்துவதையே முக்கிய இலக்காகக் கொண்டுள்ளனரோ? என்று எண்ணத்தோன்றுகிறது! படைக்கப்பட்டவனுடைய உள்ளத்தை படைத்தவன் அறிவான். படைத்தவனின் உரிமைகளை தனதாக்கிக்கொள்ள எவருக்கு தகுதியிருக்கிறது? ''இன்னமல் அஃமாலு பின் நிய்யத்''என்பதை மறப்பதேன்? நான் அல்லது நாம் செய்வது தான் சரியென்பது அவரவர் நம்பிக்கை; தீர்ப்பு செய்யும் அதிகாரம் படைத்தவனுக்குரியது. குறைகள் தெரிந்தாலும் அன்போடும் அக்கரையோடும் நளினமான முறையில் எடுத்துக்கூறும் பண்பு ஏன் இல்லாமல் போயிற்று? எங்கே இந்த சமுதாயம் அழிந்துவிடதா? என நப்பாசை கொண்டு திரிபவனுக்கு மத்தியில் நமது குறைகளை மேடைபோட்டு அரங்கேற்றுவதில் சகோதரர்களே! நீங்கள் உடன்படுகிறீர்களா? ((( 3 ))) நமது இயக்கங்களின் நிர்வாகிகள் அரசியல் குள்ளநரிகளின் சூழ்ச்சியில் விழுந்து விடும் சூழ்ச்சுமம் என்னவாக இருக்கும்? இதற்கு விடை அறிய வேண்டுமெனில் முதலில் சூழ்ச்சி என்னவென்று தெரிய வேண்டும். சமீபத்திய நிகழ்வு ஒன்றை பார்ப்போம்... நமது சமுதாய இயக்கம் ஒன்றின் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில்,, ஒரு கட்சியை வரும் பாரளுமன்றத்தேர்தலில் ஆதரிப்பது என்பதும் ஒரு தீர்மானம். இந்த முடிவு 2007 ஆம் வருடத்திலேயே எடுக்கப்பட்டது என்பது வெளியிடப்பட்ட கடிதத்தின் வாயிலாக நமக்கு இப்போது தெரிய வருகிறது. ஆனால் எழுதப்பட்ட கடிதம் யாருக்கு? நரிக்குணத்துடன் முதுகில் குத்தும் குணமுடையவருக்காயிற்றே! முன்னணி இயக்கங்களில் ஒன்றை கூட்டுப்பிடித்திருந்தும் மற்றொன்றின் ஆதரவு இல்லாததால் (கோவை மற்றும் சில இடங்கள்)பெரும்பான்மையும் கிடைக்கவில்லை; கிடைத்த இடங்களிலும் (சென்னை மற்றும் சில இடங்கள்)சொற்ப ஓட்டுக்களில் வெற்றி என்று நொந்து போயிருந்தவருக்கு அல்லவா இந்த கடிதம் எழுதப்பட்டிருக்கிறது.. 2007 ல் தகவல் கிடைக்கப்பெற்றவர் குதூகலம் அடைந்திருப்பார்! ''இந்த இஸ்லாமியர்கள் சொன்ன சொல்லைக் காப்பார்கள்'' என்பதும் ''இந்த இஸ்லாமிய இயக்கங்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்ளும் ஒற்றுமையற்ற இயக்கங்கள்'' என்பதும் புரிந்த தந்திரக்காரர் அவர்! திட்டம் வகுத்திருப்பார்!! இலவசமாக ஒரு இயக்கத்தின் ஆதரவு கிடைக்கப்போகிறது; முன்னர் ஆதரித்த இயக்கம் கூடவே இருந்தால் ஒன்றிரண்டு தொகுதிகள் கேட்டு நச்சரிப்பார்கள் ; திட்டம் வகுத்து கழற்றி விட்டுவிட்டார்.. சூடு, சொரணையற்ற இளிச்சவாயர் கூட்டத்தின் பகுதி ஓட்டுக்கள் இலவசமாகக் கிடைக்கும் போது மற்றொரு பகுதியில்லாமலே (அதுவும் சிதறி விடும்)இந்த சமுதாயத்தை சமாளித்து விடலாம் என்று சூழ்ச்சி செய்தார். சரி, அவர் சூழ்ச்சி செய்தார்! அது அவரது அரசியல்! நம்மவர்கள் எப்படி சூழ்ச்சியில் விழுந்தார்கள்? என்றெல்லாம் (இஸ்லாமிய இயக்கங்களின் இலட்சிய சகோதரர்களே) நீங்கள் கேட்க விரும்புகிறீர்கள் என்றால் ........மகிழ்ச்சி.........நீங்களும் சிந்திக்க ஆரம்பித்து விட்டீர்கள் என்று பொருள். இன்ஷா அல்லாஹ்... தொடருவேன்... சமுதாய ஒற்றுமையை விரும்பும் ஒரு சாதாரண சகோதரன்... நாஞ்சில் தமிழ்.

திக்ருகள்‏

திக்ரு என்பது இறைவனை நினைவு கூறுவதாகும்.. மனிதன் இறைவனின் நினைவுகளோடு இவ்வுலகில் வாழ வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைபாடு. இது மனிதனை வெற்றிக்கு இட்டுச் செல்லும் வழியாகும். ஐவேளை தொழுகை கூட இறைவனை நினைவு கூறக்கூடியதாகவே அமைந்துள்ளது. தொழுகை நேரம் போக அன்றாட வாழ்க்கையின் மற்ற நேரங்களிலும் இறைவனை நினைவு கூறுவதற்கு சில திக்ருகளை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.. அதற்கு முன் திக்ரு செய்வதன் சிறப்புகளை அறிந்து கொள்வது அவசியமாகும். திக்ருகளின் சிறப்புகள் : فَاذْكُرُونِي اَذْكُرُكُمْ 'என்னை நீங்கள் நினைவு கூறுங்கள், நானும் உங்களை நினைவு கூறுவேன்' (அல்குர்ஆன் 2:152) நாம் அல்லாஹ்வை திக்ரு செய்தால் அல்லாஹ் நம்மை நினைவு கூறுகிறான். இது எவ்வளவு பெரிய பாக்கியம் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். وَاذْكُرْ رَبَّكَ فِيْ نَفْسِكَ تَضَرُّعًا وَخِيْفَةً وَدُوْنَ الجَهْرِ مِنَ القَوْلِ بِالْغُدُوِّ وَالآصَالِ وَلاَ تَكُنْ مِنَ الغَافِلِيْنَ '(நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும் (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும் மாலையிலும் உம் இறைவனின் (திருநாமத்தை) திக்ரு செய்து கொண்டு இருப்பீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம்' (அல்குர்ஆன் 7:205) திக்ரு எவ்வாறு செய்ய வேண்டும் என்ற முறையை இறைவன் இங்கே நமக்கு கற்றுத் தருகிறான். يَأيُّهَا الَّذِينَ ءَامَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا ، وَسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا 'ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமான திக்ரைக் கொண்டு திக்ரு செய்யுங்கள்.. இன்னும் காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்யுங்கள்' (அல்குர்ஆன் 33:41,42) அல்லாஹ்வை அதிகமதிகம் திக்ருச் செய்ய வேண்டும், காலையிலும் மாலையிலும் அதிகமதிகம் செய்ய வேண்டும் என்பது இதன் பொருளாகும். காலையிலும் மாலையிலும் மட்டும் திக்ருச் செய்தால் போதும் என்பது இதன் பொருள் அல்ல. لاَيَقْعُدُ قَوْمٌ يَذْكُرُوْنَ اللهَ عَزَّ وَجَلَّ إِلاَّ حَفَّتْهُمُ المَلاَئِكَةُ وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ وَنَزَلَتْ عَلَيْهِمُ السَّكِيْنَةُ ، وَذَكَرَهُمُ اللهُ فِيْمَنْ عِنْدَهُ (رواه مسلم) 'அல்லாஹ்வை திக்ரு செய்தவர்களாக அமரும் கூட்டத்தினரை மலக்குகள் சூழ்ந்தும், ரஹ்மத் (இறையருள்) அவர்களை மூடியும் 'ஸகீனா' என்னும் நிம்மதி அவர்கள் மீது இறங்கியுமே தவிர வேறில்லை. அல்லாஹ் தன்னிடமுள்ளவர்களிடம் (மலக்குகளிடம்) அவர்களைப் பற்றி (புகழ்ந்து) கூறுகிறான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்கள்: அபூஹுரைரா (ரலி), அபூ ஸயீது (ரலி) நூல்: முஸ்லிம்) திக்ரு செய்வோரை மலக்குகள் சூழ்ந்து இருப்பார்கள், மனிதன் சுவர்க்கம் செல்ல அவசியம் தேவைப்படும் இறையருள் அங்கே இறங்குகிறது, நிம்மியும் இறங்குகிறது. அல்லாஹ் அவர்களைப் பற்றி புகழ்ந்து கூறுகிறான் போன்றவற்றை இழக்க எவருக்குத் தான் மனம் வரும். மற்றொரு ஹதீஸில், அல்லாஹுத்தஆலாவின் சில மலக்குகள், திக்ரு செய்பவர்களைத் தேடியவர்களாக பாதையில் சுற்றுவார்கள். அல்லாஹுத்தஆலாவை திக்ரு செய்யும் கூட்டத்தாரை அவர்கள் கண்டால் உடனே, 'இதோ இங்கு உங்கள் குறிக்கோளின் பக்கம் வாருங்கள்' என அவர்கள் ஒருவருக்கொருவர் அழைப்பு விடுப்பார்கள். உடனே அனைத்து மலக்குகளும் அங்கு வந்து, திக்ரு செய்யும் கூட்டத்தாரை முதல் வானம் வரை சூழ்ந்து கொள்வார்கள். பிறகு அவர்களின் இரட்சகனான அல்லாஹ் - அவன் மிக அறிந்தவன் - என் அடியார்கள் என்ன கூறினார்கள்? என்று கேட்பான். அதற்கவர்கள், உன்னை தஸ்பீஹ் செய்கிறார்கள், உன்னை தக்பீர் கூறுகிறார்கள், உன்னை புகழ்கிறார்கள், உன்னை கண்ணியப்படுத்துகிறார்கள் எனக் கூறுவார்கள். அதற்கவன், என்னை அவர்கள் பார்த்துள்ளார்களா? என்று கேட்பான். அதற்கவர்கள் இல்லை, அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்கள் உன்னைப் பார்க்கவில்லை என்பார்கள். அதற்கு அல்லாஹ், அவர்கள் என்னைப் பார்த்திருந்தால் எவ்வாறு இருப்பார்கள்? எனக் கேட்பான். அதற்கு மலக்குகள், அவர்கள் உன்னைப் பார்த்திருந்தால், இன்னும் மிக அதிகமாக உன்னை வணங்குபவர்களாகவும், மிக அதிகமாக உன்னைக் கண்ணியப்படுத்துபவர்களாகவும், மிக அதிகமாக உன்னை தஸ்பீஹ் செய்பவர்களாகவும் இருப்பார்கள் எனப் பதிலளிப்பார்கள். பிறகு அல்லாஹ், அவ்வடியார்கள் என்ன கேட்டார்கள்? என்று அவர்களிடம் கேட்பான். அதற்கவர்கள், அவர்கள் உன்னிடம் சுவர்க்கத்தை கேட்டார்கள் எனக் கூறுவார்கள். அதற்கு அல்லாஹ், அவர்கள் அதனைப் பார்த்துள்ளார்களா? என்று கேட்பான். அதற்கு மலக்குகள், இல்லை, அல்லாஹ்வின் மீது ஆணையாக! எங்கள் இரட்கனே! அவர்கள் அதனைப் பார்க்கவில்லை எனப் பதிலளிப்பார்கள். அதற்கு அல்லாஹ், அவர்கள் அதனைப் பார்த்திருந்தால் எவ்வாறு இருக்கும்? என்று கேட்பான். அதற்கு மலக்குகள், அவர்கள் அதனைப் பார்த்திருந்தால் அதன் மீது மேலும் பேராசைக் கொள்வார்கள், அதிகமாகத் தேடுவார்கள், அதனை அடைய அளப்பெறும் ஆவல் கொள்வார்கள் எனக் கூறுவார்கள். பின்னர் அவர்கள் எதனை விட்டுப் பாதுகாவல் தேடுகிறார்கள் என மலக்குகளிடம் அல்லாஹ் கேட்பான். அதற்கவர்கள், அவர்கள் நரகை விட்டுப் பாதுகாவல் தேடுகின்றனர் என்பர். அவர்கள் அதனைப் பார்த்துள்ளார்களா? என்று அல்லாஹ் கேட்பான். அதற்கவர்கள், இல்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்கள் அதனைப் பார்க்கவில்லை என மறுமொழி கூறுவார்கள். அவர்கள் அதனைப் பார்த்திருந்தால் எவ்வாறு? என்று அல்லாஹ் கேட்பான். அதற்கவர்கள், அவர்கள் அதைப் பார்த்திருந்தால் இதைவிட மிக அதிகமாக அதனை விட்டு விரண்டோடுவார்கள். கடுமையாக அதனை அஞ்சுவார்கள் எனப் பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ் (மலக்குகளே) நான் அவர்களை மன்னித்து விட்டேன். அதற்கு உங்களைச் சாட்சிகளாக ஆக்குகிறேன் என்று கூறுவான். அப்போது மலக்குகளில் ஒருவர் அவர்களில் ஒருவர் திக்ர் செய்தவர்களின் கூட்டத்தில் உள்ளவரல்ல, ஏனெனில் அவர் அவரது ஏதோ ஒரு தேவைக்காக அங்கு வந்தார் எனக் கூறுவார். அதற்கு அல்லாஹ், திக்ரு செய்தவர்களாக அமர்ந்திருந்தவர்களுடன் சேர்ந்து அமர்ந்து இருந்த எந்த மனிதரும் நற்பாக்கியத்தை இழக்க மாட்டார். (அவரும் நற்கூலி பெறுவார்) எனக் கூறுவான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) மற்றொரு ஹதீஸில், அபூ வாகித் அல் ஹாரிஸ் பின் அவ்ப் (ரலி) அறிவிக்கிறார்கள்: அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதில் அமர்ந்து இருந்தார்கள். மக்களும் அவர்களுடன் அமர்ந்து இருந்தார்கள்.. அப்போது மூன்று நபர்கள் வந்தார்கள். அவர்களில் இருவர் நபி (ஸல்) அவர்களின் சமூகம் முன்னோக்கி வந்தனர். ஒருவர் போய் விட்டார். அவ்விருவரும் நபியவர்களின் அவையில் சிறிது நேரம் நின்று கொண்டிருந்தார்கள். அப்போது அவ்விருவரில் ஒருவர் அவ்வட்டத்தில் ஒரு காலியிடத்தைப் பார்த்தார்... உடனே அவர் அதில் போய் அமர்ந்தார். மற்றொருவர் அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து கொண்டார். நபி (ஸல்) அவர்கள் தங்களின் சொற்பொழிவை நிறைவு செய்ததும் கூறினார்கள்: மூன்று நபர்களைப் பற்றி உங்களுக்கு நான் அறிவித்துத் தரட்டுமா? அவர்களில் ஒருவர் அல்லாஹ்வின் பக்கம் ஒதுங்கினார். அல்லாஹ் சேர்த்துக் கொண்டான். மற்றொருவர் வெட்கப்பட்டார். அல்லாஹ்வும் அவரிடமிருந்து வெட்கப்பட்டுக் கொண்டான். இன்னொருவர் புறக்கணித்துச் சென்றுவிட்டார். அல்லாஹ்வும் அவரைப் புறக்கணித்து விட்டான். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்) ஒரு நாள் முஆவியா (ரலி) அவர்கள் மஸ்ஜிதில் அமர்ந்திருந்த ஒரு திக்ரின் ஹல்காவிற்கு (வட்டத்திற்கு) வந்தார்கள். அப்போது அவர்களைப் பார்த்து, நீங்கள் ஏன் இங்கு அமர்ந்து இருக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கவர்கள், நாங்கள் அல்லாஹ்வை திக்ரு செய்தவர்களாக அமர்ந்துள்ளோம் என மறுமொழி கூறினார்கள். அதற்கு முஆவியா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீது ஆணையாக! அதைத்தவிர வேறு எதற்காகவும் நீங்கள் இங்கு உட்காரவில்லையே? என்றார்கள். அதற்கவர்கள், அதைத்தவிர வேறு எதற்காகவும் நாங்கள் இங்கு உட்காரவில்லை எனக் கூறினார்கள். அதற்கு முஆவியா (ரலி) அவர்கள், நான், 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக!' என்று உங்களிடம் கேட்டது உங்கள் மீது சந்தேகப்பட்டு அல்ல. (எனினும் உங்கள் நோக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகத்தான்.) நான் நபி (ஸல்) அவர்களிடம் சிறப்பான அந்தஸ்தைப் பெற்றிருந்தும் (பேணுதலின் காரணமாக) அவர்களைப் பற்றி மிகக் குறைவாகவே ஹதீஸ்களை அறிவிக்கின்றேன். அவைகளில் ஒன்று. ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களின் ஒரு ஹல்காவிற்கு (வட்டத்திற்கு) வந்தார்கள். ஏன் இங்கு அமர்ந்துள்ளீர்கள்? என்று அவர்களிடம் வினவினார்கள். அதற்கவர்கள், 'நாங்கள் அல்லாஹ்வை திக்ரு செய்தவர்களாகவும், எங்களுக்கு இஸ்லாமுக்கு வழிகாட்டி எங்கள் மீது அருள் புரிந்ததற்காக அல்லாஹ்வைப் புகழ்ந்தவர்களாகவும் அமர்ந்துள்ளோம் எனக் கூறினார்கள். அப்போது, நபியவர்கள், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் அதற்காகவே அமர்ந்துள்ளீர்களா?' என்றார்கள். அதற்கவர்கள், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! அதற்காகவே நாங்கள் அமர்ந்துள்ளோம்' என்று கூறினார்கள். அப்போது நபியவர்கள், நான் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்று உங்களிடம் கேட்டது உங்கள் மீது சந்தேகப்பட்டு அல்ல, எனினும் (இப்பொழுதுதான்) ஜிப்ரீல் (அலை) என்னிடம் வந்தார்கள். நிச்சயமாக அல்லாஹ் தன் மலக்குகளிடம் உங்களைப் பற்றி பெருமை பாராட்டுகின்றான் என அவர்கள் என்னிடம் கூறினார்கள்' எனப் பகர்ந்தார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீதில் குத்ரீ (ரலி), நூல்: முஸ்லிம்

1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்களை தரப்பட்ட இணைப்பின் மூலம் பெறலாம்

1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்களை தரப்பட்ட இணைப்பின் மூலம் பெறலாம்
இதை Print செய்து தேவையான மாணவர்களுக்கு கொடுத்து உதவலாம்.